Saturday, 8 September 2018

இந்தியாவில் ஆளுநர் விபரங்கள்: 31/08/2018 ன் படி - India governors

இந்தியாவில் உள்ள 29 மாநிலத்தின் பெயர், தலைநகரம், முதலமைச்சர், ஆளுநர் விபரங்கள்:
31/08/2018 ன் படி

1.ஆந்திரா பிரதேசம்

மாநிலம்: ஆந்திர பிரதேசம்


தலைநகரம்: அமராவதி ஹைதராபாத்

முதலமைச்சர்: சந்திரபாபு நாயுடு

ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்
------------------------------------------------------------------------------------
2.அருணாச்சல் பிரதேசம்

மாநிலம்: அருணாச்சல பிரதேசம்

தலைநகரம்: இட்டாநகர்

முதலமைச்சர்: பெமா கந்தூ

ஆளுநர்: Dr.B.D. மிஸ்ரா
------------------------------------------------------------------------------------
3. அசாம்

மாநிலம்: அசாம்

தலைநகரம்: திஸ்பூர்

முதலமைச்சர்: சர்பானந்த சோனுவாள்

ஆளுநர்: ஜக்திஷ் முகீ
-----------------------------------------------------------------------------------------
4. பீகார்

மாநிலம்: பீகார்

தலைநகரம்: பாட்னா

முதலமைச்சர்: நிதீஷ் குமார்

ஆளுநர்: சத்யா பால் மாலிக்
---------------------------------------------------------------------------------------------
5. சத்தீஸ்கர்

மாநிலம்: சத்தீஸ்கர்

தலைநகரம்: புதிய ராய்பூர்

முதலமைச்சர்: டாக்டர் ராமன் சிங்

ஆளுநர்: ஆனந்திபென் பட்டேல்
-----------------------------------------------------------------------------------------------
6. கோவா

மாநிலம்: கோவா

தலைநகரம்: பானாஜி

முதலமைச்சர்: மனோகர் பாரிக்கர்

ஆளுநர்: மிருதுளா சின்ஹா
----------------------------------------------------------------------------------------------------
7.குஜராத்

மாநிலம்: குஜராத்

தலைநகரம்: காந்திநகர்

முதலமைச்சர்: விஜய் ரூபனி

ஆளுநர்: ஓம் பிரகாஷ் கோஹில்
--------------------------------------------------------------------------------------
8. ஹரியானா

மாநிலம்: ஹரியானா

தலைநகரம்: சண்டிகர்

முதலமைச்சர்: மனோகர் லா கஹ்தார்

ஆளுநர்: கப்டன் சிங் சோலங்கி
----------------------------------------------------------------------------------
9. ஹிமாச்சல பிரதேசம்

மாநிலம்: இமாச்சல பிரதேசம்

தலைநகரம்: சிம்லா மற்றும் குளிர்காலத்தில் தர்மசாலா

முதலமைச்சர்: ஜெய் ராம் தாகூர்

ஆளுநர்: ஆச்சார்யா தேவ் வட்
------------------------------------------------------------------------------------
10. ஜம்மு & காஷ்மீர்

மாநிலம்: ஜம்மு & காஷ்மீர்

தலைநகரம்: ஸ்ரீநகர் மற்றும் குளிர்காலத்தில் ஜம்மு

முதலமைச்சர்:

ஆளுநர்: சத்ய பால் மாலிக்
--------------------------------------------------------------------------------------------
11. ஜார்கண்ட்

மாநிலம்: ஜார்கண்ட்

தலைநகரம் : ராஞ்சி

முதலமைச்சர்: ரகுபார் தாஸ்

ஆளுநர்: திரௌபதி முர்மு
------------------------------------------------------------------------------------
12. கர்நாடகம்

மாநிலம்: கர்நாடகா

தலைநகரம் : பெங்களூரு

முதலமைச்சர்: எச். டி.குமாரசாமி

ஆளுநர்: வாஜூபாய் வாலா
------------------------------------------------------------------------------------
13. கேரளா

மாநிலம்: கேரளா

தலைநகரம்: திருவனந்தபுரம்

முதலமைச்சர்: பினராயி விஜயன்

ஆளுநர்: பி.சதாசிவம்
---------------------------------------------------------------------------------
14. மத்தியப் பிரதேசம்

மாநிலம்: மத்திய பிரதேசம்

தலைநகரம்: போபால்

முதலமைச்சர்: சிவராஜ் சிங் சௌஹான்

ஆளுநர்: ஆனந்தீபன் படேல்
----------------------------------------------------------------------------
15.மகாராஷ்டிரா

மாநிலம்: மகாராஷ்டிரா

தலைநகரம் : மும்பை மற்றும் இந்தியாவின் பொருளாதார தலைநகரம்

முதலமைச்சர்: தேவேந்திர பத்னாவிஸ்

ஆளுநர்: சி.வி.யாசாகர் ராவ்
----------------------------------------------------------------------------
16. மணிப்பூர்

மாநிலம்: மணிப்பூர்

தலைநகரம்: இம்பால்

முதலமைச்சர்: N.பிரென் சிங்க்

ஆளுநர்: நஜ்மா ஹெப்டுல்லா
--------------------------------------------------------------------------------
17. மேகாலயா

மாநிலம்: மேகாலயா

தலைநகரம்: ஷில்லாங்

முதலமைச்சர்: கான்ராட் சங்மா

ஆளுநர்: கங்கா பிரசாத்
----------------------------------------------------------------------------
18. மிசோரம்

மாநிலம்: மிசோரம்

தலைநகரம்: அய்சால்

முதலமைச்சர்: பூ லால்லான்ஹவாலா

ஆளுநர்: நிர்பாய் சர்மா
--------------------------------------------------------------------------------------
19. நாகலாந்து

மாநிலம்: நாகாலாந்து

தலைநகரம்: கோஹிமா

முதலமைச்சர்: நேபியூ ரோ

ஆளுநர்: பத்மநாப ஆச்சார்யா
------------------------------------------------------------------------
20. ஒடிஷா

மாநிலம்: ஒடிசா

தலைநகரம்: புவனேஸ்வர்

முதலமைச்சர்: நவீன் பட்நாயக்

ஆளுநர்: சத்யா பால் மாலிக்
--------------------------------------------------------------------------
21. பஞ்சாப்

மாநிலம்: பஞ்சாப்

தலைநகரம்: சண்டிகர்

முதல்வர்: கேப்டன் அம்ரிந்தர் சிங்

ஆளுநர்: வி.சி.சிங் பாட்னோர்
----------------------------------------------------------------------------------
22. ராஜஸ்தான்

மாநிலம்: ராஜஸ்தான்

தலைநகரம்: ஜெய்ப்பூர்

முதலமைச்சர்: வசுந்தரா ராஜே

ஆளுநர்: கல்யாண் சிங்
---------------------------------------------------------------------------------------
23. சிக்கிம்

மாநிலம்: சிக்கிம்

தலைநகரம்: கேங்டாக்

முதலமைச்சர்: பவன் சாம்லிங்

ஆளுநர்: ஸ்ரீனிவாஸ் தாதாசாஹேப் பாட்டில்
-----------------------------------------------------------------------------------------
24. தமிழ்நாடு

மாநிலம்: தமிழ்நாடு

தலைநகரம்: சென்னை

முதலமைச்சர்: எடப்பாடி கே.பழனிச்சாமி

ஆளுநர்: பன்வாரிலால் புரோஹித்
-------------------------------------------------------------------------------------------
25. தெலுங்கானா

மாநிலம்: தெலுங்கானா

தலைநகரம்: ஹைதராபாத்

முதலமைச்சர்: கே. சந்திரசேகர் ராவ்

ஆளுநர்: ஈ.எஸ்.எல். நரசிம்மன்
--------------------------------------------------------------------------------
26. திரிபுரா

மாநிலம்: திரிபுரா

தலைநகரம்: அகர்தலா

முதலமைச்சர்: பிப்லாப் குமார் தேவ்

ஆளுநர் : ததகதா ராய்
--------------------------------------------------------------------------------------
27. உத்தரப் பிரதேசம்

மாநிலம்: உத்தர பிரதேசம்

தலைநகரம்: லக்னோ

முதல்வர்: யோகி ஆதித்யநாத்

ஆளுநர் : ராம் நாயக்
--------------------------------------------------------------------------------------
28. உத்தரகண்ட்

மாநிலம்: உத்தரகண்ட்

தலைநகரம்: டேராடூன்

முதலமைச்சர்: திரிவேந்திர சிங் ராவத்

ஆளுநர்: கிருஷ்ணா காந்த் பால்
----------------------------------------------------------------------------------------
29. மேற்கு வங்கம்

மாநிலம்: மேற்கு வங்கம்

தலைநகரம்: கொல்கத்தா

முதலமைச்சர்: மம்தா பானர்ஜி

ஆளுநர்: கேசரிநாத் திரிபாதி
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------

மாநிலங்கள் உருவான வருடங்கள்

மாநிலங்கள் உருவான வருடங்கள்
===================================
1) அசாம் =  26.01.1950
2) அருணாச்சல பிரதேசம் =  20.02.1987
3) ஆந்திரப் பிரதேசம் = 01.11.1956
 ===================================
4) இமாச்சலப் பிரதேசம் = 25.01.1971
===================================
5) உத்தரகாண்ட் = 09.11.2000
6) உத்தரப் பிரதேசம் = 26.01.1950
===================================
7) ஒடிஷா = 26.01.1950
===================================
8) கர்நாடகம் = 01.11.1956
9) குஜராத் = 01.05.1960
10) கேரளா = 01.11.1956
11) கோவா = 30.05.1987
===================================
12) சட்டீஸ்கர் = 01.11.2000
13) சிக்கிம் = 16.05.1975
===================================
14) தமிழ்நாடு = 26.01.1950
15) திரிபுரா = 21.01.1972
16) தெலுங்கானா = 02.06.2014
===================================
17) நாகாலாந்து = 01.12.1963
===================================
18) பஞ்சாப் = 01.11.1956
19) பீகார் = 26.01.1950
===================================
20) மஹாராஷ்ட்ரா = 01.05.1960
21) மணிப்பூர் = 21.01.1972
22) மத்தியப் பிரதேசம் = 01.11.1956
23) மிசோரம் = 20.02.1987
24) மேகாலயா = 21.01.1972
25) மேற்கு வங்காளம் = 26.01.1950
===================================
26) ராஜஸ்தான் = 01.11.1956
===================================
27) ஜம்மு-காஷ்மீர் = 26.01.1956
28) ஜார்க்கண்ட் = 15.11.2000
29) ஹரியானா = 01.11.1966
===================================
30) தில்லி = 01.11.1956
31) அந்தமான் தீவுகள் = 01.11.1956
32) இலட்சத் தீவுகள் = 01.11.1956
33) தாத்ரா நாகர் ஹவேலி = 11.08.1961
34) புதுச்சேரி = 16.08.1963
35) டாமன்-டையூ = 30.05.1987
===================================

Sunday, 12 August 2018

திண்டுக்கல் மாவட்ட மக்களின் ஆட்சியர் அவர்களின் பாராட்டு



திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் பாராட்டு 

 மருத்துவத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி தமிழக அரசின் சிறந்த மருத்துவர்  விருது பெற்று  நமது திண்டுக்கல் மாவட்டத்திற்குப் பெருமைசேர்த்த நிலக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திருமதி.G.பூங்கோதை செல்வராஜ் மற்றும் பழனி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் .திரு . P .விஜயசேகர் அவர்களும், மருத்துவர் திருமதி .J.மாலதி பிரகாஷ் - இணை இயக்குநர் , நலப்பணிகள் - திண்டுக்கல் அவர்கள் முன்னிலையில் நம் திண்டுக்கல் மாவட்ட மக்களின் ஆட்சியர் மருத்துவர் திரு .D.G.வினய் IAS அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர் .மேலும் அவர்களின் பணி சிறக்கப் பாராட்டையும் தெரிவித்தார் .





Thursday, 2 August 2018

தமிழகம் ................ தெரிந்து கொள்வோம்

 தமிழகம் --------- தெரிந்து கொள்வோம்




Image result for tamil nadu outline map







தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு-- 1,30,058 ச.கி.மீ
மக்கள் தொகை. ------------------ 7,21,38,958
ஆண்கள் ----------------------------- 3,61,58,871
பெண்கள்---------------------------- 3,59,58,871
மொத்த மாவட்டங்கள்-------------- 32
தாலுகாக்கள்------------------------ 220
கிராமங்கள்-------------------------- 15,243
நகரங்கள் ---------------------------- 1097
நகராட்சிகள் ------------------------- 148
மாநகராட்சிகள் ---------------------- 12
மாநில பறவை------------------------ மரகதப்புறா
மாநில விலங்கு---------------------- நீலகிரி வரையாடு
மாநில மரம்--------------------------- பனை
மாநில மலர்-------------------------- செங்காந்தள்
மாநில நடனம்------------------------ பரத நாட்டினம்
மாநில விளையாட்டு ---------------- கபடி
மாநில வீரம்--------------------------- மஞ்சுவிரட்டு
அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்-- கன்னியாகுமரி
மிக உயர்ந்த கோபுரம்--------------- ஸ்ரீரெங்கம்
மிக உயர்ந்த சிகரம்----------------- தொட்டபெட்டா (2,636)
உயரமான சிலை-------------------- திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி (133 அடி)
நீளமான ஆறு----------------------- காவிரி
குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் --- பெரம்பலூர் (4,86,971)
மிக சிறிய மாவட்டம் --------------- சென்னை (174 கி.மீ)
மிக பழைய அணைக்கட்டு-------- கல்லணை, திருச்சிராப்பள்ளி
மிக பெரிய கோவில்--------------- தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்
மிக பெரிய தேர்--------------------- திருவாரூர் தேர்
மிக நீளமான பாலம்------------------ பாம்பன் பாலம் ,இராமேஸ்வரம்
மிக பெரிய மாவட்டம் -------------- தர்மபுரி (9622 கிமீ )
முதல் இருப்பு பாதை(ரயில்வே)--- ராயபுரம்-வாலாஜாபேட்டை (1856)
முதலில் வெளியான தமிழ் நாளிதழ்-- சுதேசமித்திரன் (1829)
முதல் பெண் முதலமைச்சர்- ஜானகி ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர் மனைவி)
முதல் பேசும் படம்- காளிதாஸ் (1931)
முதல் மாநகராட்சி - சென்னை (26-09-1688)

முதன்மைகள்

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.சி.வி . ராமன் (1930)

2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி

3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி

4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)

8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்

9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்

10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)

12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)

13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி

16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்

20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

22. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசக வதம் (1916)

23. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)

24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)

25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்

26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்

27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)

29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)

30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)

31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)

32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)

33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)

34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்

35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்

36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)

37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)

38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)

39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)

40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)

41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்

42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்

43. மிகப் பழமையான அணை – கல்லணை

44. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை, முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)

45. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)நாமும் படித்து பிறர்க்கும் பகிர்வோம்

Wednesday, 1 August 2018

தெரிந்து கொள்ளுங்கள்





Image result for nature drawing


1. தமிழ் வருடங்கள்(60)


2. அயணங்கள்(2)

3. ருதுக்கள்(6)

4. மாதங்கள்(12)

5. பக்ஷங்கள்(2)

6. திதிகள்(15)

7. வாஸரங்கள்(நாள்)(7)

8. நட்சத்திரங்கள்(27)

9. கிரகங்கள்(9)

10. நவரத்தினங்கள்(9)

11. பூதங்கள்(5)

12. மஹா பதகங்கள்(5)

13. பேறுகள்(16)

14. புராணங்கள்(18)

15. இதிகாசங்கள்(3)

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தமிழ் வருடங்கள்:

1. ப்ரபவ
2. விபவ
3. சுக்ல
4. ப்ரமோதூத
5. ப்ரஜோத்பத்தி
6. ஆங்கீரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது(தாத்ரு)
11. ஈச்வர
12. வெகுதான்ய
13. ப்ரமாதி
14. விக்ரம
15. விஷு
16. சித்ரபானு
17. ஸுபானு
18. தாரண
19. பார்த்திப
20. வ்யய
21. ஸர்வஜித்
22. ஸர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துன்முகி
31. ஹேவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வாரி
35. ப்லவ
36. சுபக்ருது
37. சோபக்ருது
38. க்ரோதி
39. விச்வாவஸு
40. பராபவ
41. ப்லவங்க
42. கீலக
43. ஸெளம்ய
44. ஸாதாரண
45. விரோதிக்ருத்
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. ஸித்தார்த்தி
54. ரெளத்ரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்தோத்காரி
58. ரக்தாக்ஷி
59. க்ரோதன
60. அக்ஷய.

அயணங்கள்:

1. உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்)

2. தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்)

இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.

ருதுக்கள்:

1. வஸந்தருது
(சித்திரை, வைகாசி)

2. க்ரீஷ்மருது
(ஆனி, ஆடி)

3. வர்ஷருது
(ஆவணி, புரட்டாசி)

4. ஸரத்ருது
(ஐப்பசி, கார்த்திகை)

5. ஹேமந்தருது
(மார்கழி, தை)

6. சிசிரருது
(மாசி, பங்குனி)

இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.

மாதங்கள்:

1. சித்திரை (மேஷம்)
2. வைகாசி (ரிஷபம்)
3. ஆனி (மிதுனம்)
4. ஆடி (கடகம்)
5. ஆவணி (சிம்மம்)
6. புரட்டாசி (கன்னி)
7. ஐப்பசி (துலாம்)
8. கார்த்திகை (விருச்சிகம்)
9. மார்கழி (தனுர்)
10. தை (மகரம்)
11. மாசி (கும்பம்)
12. பங்குனி (மீனம்)

பக்ஷங்கள்:

1. ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

2. க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)

திதிக்கள்:

1. பிரதமை
2. துதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. ஷஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரையோதசி
14. சதுர்த்தசி
15. பெளர்ணமி (அ) அமாவாசை.

வாஸரங்கள்:

1. ஆதித்யவாஸரம்
2. சோமவாஸரம்
3. மங்களவாஸரம்
4. ஸெளமியவாஸரம்
5. குருவாஸரம்
6. சுக்ரவாஸரம்
7. மந்தவாஸரம் (அ)
ஸ்திரவாஸரம்

நட்சத்திரங்கள்:

1. அஸ்வினி
2. பரணி
3. கர்த்திகை
4. ரோகினி
5. மிருகசீரிஷம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. ஹஸ்த்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்ராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி.

கிரகங்கள்:

1. சூரியன் (SUN)
2. சந்திரன் (MOON)
3. அங்காரகன் (MARS)
4. புதன் (MERCURY)
5. குரு (JUPITER)
6. சுக்ரன் (VENUS)
7. சனி (SATURN)
8. இராகு (ASCENDING NODE)
9. கேது (DESCENDING NODE)

நவரத்தினங்கள்:

1. கோமேதகம்
2. நீலம்
3. பவளம்
4. புஷ்பராகம்
5. மரகதம்
6. மாணிக்கம்
7. முத்து
8. வைடூரியம்
9. வைரம்.

பூதங்கள்:

1. ஆகாயம் - வானம்
2. வாயு - காற்று
3. அக்னி - நெருப்பு(தீ)
4. ஜலம் - நீர்
5. பிருத்வி - நிலம்

மஹா பாதகங்கள்:

1. கொலை
2. பொய்
3. களவு
4. கள் அருந்துதல்
5. குரு நிந்தை.

பேறுகள்:

1. புகழ்
2. கல்வி
3. வலிமை
4. வெற்றி
5. நன்மக்கள்
6. பொன்
7. நெல்
8. நல்ஊழ்
9. நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பொறுமை
13. இளமை
14. துனிவு
15. நோயின்மை
16. வாழ்நாள்.

புராணங்கள்:

1. பிரம்ம புராணம்
2. பத்ம புராணம்
3. பிரம்மவைவர்த்த புராணம் 4. லிங்க புராணம்
5. விஷ்ணு புராணம்
6. கருட புராணம்
7. அக்னி புராணம்
8. மத்ஸ்ய புராணம்
9. நாரத புராணம்
10. வராக புராணம்
11. வாமன புராணம்
12. கூர்ம புராணம்
13. பாகவத புராணம்
14. ஸ்கந்த புராணம்
15. சிவ புராணம்
16. மார்க்கண்டேய புராணம்
17. பிரம்மாண்ட புராணம்
18. பவிஷ்ய புராணம்.

இதிகாசங்கள்:

1. சிவரகசியம்
2. இராமாயணம்
3. மஹாபாரதம்.

யார் ....சீரடி சாய்பாபா ?



Image result for sai baba images



சீரடி சாய்பாபா

Image result for sai baba images

சீரடிபாபாவின் தாய், தந்தை யார் ? சொந்த ஊர் எது? இயற்பெயர் என்ன? இவை எதுவும் யாரும் அறிந்ததில்லை. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் கோதாவரி நதிக்கரையில் உள்ள சீரடி எனும் அந்த கிராமத்தில் ஒரு மிகப்பழமையான மசூதி ஒன்று இருந்தது. அந்த மசூதியின் பின்பக்கம் ஒரு வேப்பமரத்தின் அடியில் ஒரு எட்டு வயது குழந்தை தியானம் செய்து கொண்டிருந்தது. அந்த குழந்தையின் முகத்தில் அருள் ஒளி வட்டம் வீசுவதை கண்ட அந்த கிராமத்துத் தலைவரின் மனைவியார் பாஜ்யாபாய் அந்த குழந்தையைக் கண்டு தன்னுடன் வரும்படி அழைத்தார். அக்குழந்தை அவருடன் செல்ல மறுத்து தியானம் செய்வதிலேயே ஆர்வம் கொண்டது. அந்த குழந்தை தன்னுடன் வர மறுத்தாலும் அந்தச் குழந்தையிடம் ஏற்பட்ட பாசத்தால் தினமும் உணவு கொண்டு வந்து தருவதாகவும் அதை மறுக்காமல் வாங்கி கொள்ள வெண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு அந்த குழந்தையும் சம்மதித்தது.
-
அந்தத் தாயும் குழந்தைக்குத் தினமும் உணவு கொண்டு வந்து தந்தார். அந்த குழந்தையும் அதை வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளும். அவர்களுக்கிடையே தாய், மகன் பாசம் உண்டானது. அந்த வேப்பமரத்தின் அருகிலிருந்த கந்தோபா எனும் ஆலயத்தின் பூசாரி அந்த குழந்தையிடம் இருந்த தெய்வீக அருள் ஒளியைக் கண்டு அந்தச் சிறுவனை “சாய்” என்று அழைத்தார். சில நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுவன் அந்த ஊரை விட்டு வெளியேறி, ஊர் ஊராக அலைந்து திரிந்து அங்குள்ள கோவில்களில் வணங்கி வழிபட்டான். ஒருநாள் சிறுவன் சாந்து பாட்டீல் எனும் வியாபாரியை கண்டான். அந்தச் சிறுவனின் அருள் தன்மையைக் கண்டு வணங்கிய அவர் தமது மகள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டார்.
-
சாய் எனும் அந்த சிறுவன் வியாபாரியின் மகள் திருமணத்திற்காக சீரடிக்கு மீண்டும் வந்தான். அப்போது சிறுவனுக்கு வயது பதினாறு ஆகியிருந்தது. சீரடிக்குத் திரும்பிய அந்தச் சிறுவன் தான் முன்பு அமர்ந்திருந்த அந்த வேப்பமரம் தேடிச் சென்று அமர்ந்தான். கந்தோபா கோயில் பூசாரிக்கு வேப்பமரத்தடியில் முன்பு தியானம் செய்து கொண்டிருந்த அந்த சாய் மீண்டும் திரும்பி வந்திருப்பதை கண்டார். அந்தச் சிறுவன் அந்த வேப்பமரத்தை விட்டு வேறு ஒரு இடத்திலும் அமர மறுப்பதைக் கண்ட அந்த ஊர் அது பற்றி அவரிடமே கேட்டார்கள். அதற்கு அந்த அருள் மிகுந்த சிறுவன் இந்த வேப்பமரமே தனது குரு என்று பதில் கூறினார். பின் அந்த மரத்தினடியில் ஒரு இடத்தைக் காட்டி அந்த இடத்தைத் தோண்டச் சொன்னார். சிறிது ஆழம் தோண்டியதும் அங்கு உள்ளே ஒரு சிறு அறையில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் அந்த ஊர் மக்கள் மெய் சிலிர்த்து போனார்கள். 
-
அந்தச் சிறுவனைக் கடவுளின் அவதாரமாகக் கருதினார்கள். கடவுளைப் போன்று வழிபட துவங்கினார்கள். அன்றிலிருந்து அந்தச் சிறுவன் அற்புதங்கள் பல நிகழ்த்தத் துவங்கினார். அந்தச் சிறுவன் கோவில் பூசாரி அழைத்த சாய் என்பதுடன் சீரடி மக்கள் பாபா என்பதையும் சேர்த்து “சாய்பாபா” என்று அழைக்கத் துவங்கினார்கள். உலகை உய்விக்கவந்த பாபா இப்படி தான் மக்களிடையே உருவானார். சீரடி சாய்பாபா சீரடியில் அற்புதமான செயல்களைச் செய்து அனைவரையும் நேசிக்கவும் வைத்தார். இவரின் அற்புதங்கள் எல்லா ஊர்களிலும் பரவியது. அவரைத் தேடி பல ஊரிலிருந்தும் மக்கள் வரத் துவங்கினார்கள். 

அவரும் அனைவரது துயரங்களுக்கும் விடியலாக பல அற்புதங்களைச் செய்து மகிழ்ச்சியடையச் செய்தார். அவர் வேப்பமரத்தடியில் கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டு வந்தாலும் இசுலாமிய வழிபாட்டுத் தலமான மசூதியில் தங்கிக் கொண்டு அவர்களுடைய நம்பிக்கைக்கும் உரியவரானார். எனவே இரு மதத்தினருக்கும் மத அடிப்படையிலான ஒற்றுமைகளை எடுத்துச் சொல்லி மத வேற்றுமைகளை நீக்கினார். இதனால் சாயிடம் இரு மதத்திலிருப்போரும் ஈடுபாடு கொண்டனர். அற்புதங்கள் பல செய்த சாய்பாபாவிற்கு வக்கீல் பட் என்பவர் அறிமுகமானார். அவர் சாய்பாபா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். சாய்பாபா அவரிடம் தான் ஜீவசமாதி அடைவதற்காக வீடு ஒன்று கட்டித் தரும்படி கேட்க அப்படியே அவரும் வீடு கட்டித் தந்தார். 

சாய்பாபா அந்த வீட்டில் அப்துல் என்ற ஏழை பக்தரை தனக்கு உதவி செய்வதற்காக தன்னுடன் வைத்துக் கொண்டார். இறுதியில் அனைவருக்கும் அருள் செய்த அந்த மகாகுரு 1918 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதியன்று சாய்பாபா சமாதி அடைந்தார். இன்றும் ஏராளமான மக்கள் நம்பிக்கையோடு சீரடிசாய்பாபாவை தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலிருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு அடுத்து இந்த சீரடி சாய்பாபாவின் தலத்திற்கு வருபவர்கள் தான் அதிகம். -

ஆடிப்பெருக்கின் அற்புதம்

ஆனந்தம் தரும் ஆடிப்பெருக்கு ஆடிப்பெருக்கின்  அற்புதம்

3–8–2018 வெள்ளிக்கிழமை  அன்று  ஆடிப்பெருக்கு





ஆடி மாதத்தில் பொதுவாக மழை பெய்யும் மழையின் காரணமாக ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனை ஆற்றுப்பெருக்கு என்பார்கள். இந்த புதுவெள்ளத்தின் காரணமாக ஆறுகளும், நீர் நிலைகளும் நிரம்பி காணப்படும். ஆடி மாதத்தில் 18–ம் நாளை ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுவார்கள். இந்த தினத்தை 18–ம் பெருக்கு என்றும் கூறுவதுண்டு.

காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதினெட்டு கொண்டாடுவதை, சிலர் மூவாறு ‘பதினெட்டு’ என்று கூறுவார்கள். தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர்வரத்து அதிகரிக்கும். விவசாயம் செய்வதற்கு ஏதுவாக, நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

அன்றைய தினம் நீர்நிலைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பூஜைகள் செய்து ஆற்றின் கரையில் நின்று வழிபட்டு, விவசாயத்தை தொடங்குவார்கள். மேலும் ஆடிப் பெருக்கு நாளில் ஆற்றங்கரையில் மக்கள் பெரும் திரளாக கூடுவார்கள். கரையோரங்களில் ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தை பசுஞ்சாணத்தால் மெழுகி, தரையில் இலை விரித்து, பிள்ளையார் வைத்து வழிபாடு செய்வார்கள்.

இவ்வாறு வழிபாடு செய்வதனால், ஆற்றில் நீர் பெருகியது போல, மக்களின் மனதிலும், வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கையாகும். சிலர் கோவில்களுக்கு சென்றும் வழிபாடு செய்வார்கள். ஆற்றங்கரையில் கூடும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து பல வகையான சாதங்கள் செய்து கொண்டு வந்து, தங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும், சுற்றத்தாருடனும் அமர்ந்து மகிழ்ச்சியாக உணவு உண்டு சந்தோஷத்தை பங்கிட்டுக் கொள்வார்கள்.

இந்த விழாவில் சிறப்பு அம்சமாக, ஆடிப்பெருக்கு அன்று ஆற்றங்கரையில் வைத்து சுமங்கலி பெண்கள் தாலிக்கு புது மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள். ஏற்கனவே கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை, ஆற்றில் விட்டு விட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை கோர்த்து, கணவன் மூலமோ அல்லது சுமங்கலி பெண்கள் மூலமாகவோ தங்கள் கழுத்தில் அணிந்து கொள்வார்கள். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.

சூரியன் தென்திசை நோக்கிப் பயணப்படுவதை, தட்சிணாயன புண்ணிய காலம் என்று குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் தொடங்குவார்கள். ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வதுண்டு. இந்த நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். ஆடி 18–ந் தேதி காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் இந்த நாளில் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வது வழக்கம். 

ஆறு மற்றும் நீர் நிலைகளின் ஓரம் தான் என்று இல்லை, வீட்டிலேயே கூட எளிமையான முறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடலாம். அதற்கு செய்ய வேண்டியது இதுதான்.

ஒரு செம்பில் சிறிதளவு அரைத்த மஞ்சளை போட வேண்டும். பின்னர் அந்த செம்பில், நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரில் மஞ்சள் கரைந்துவிடும். வீட்டின் பூஜை அறையில் இருக்கும் திருவிளக்கில் தீபம் ஏற்றி, விளக்கின் முன்பாக செம்பு நீரை வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப்பூக்களை போட வேண்டும். தொடர்ந்து கற்பூர ஆரத்தி அல்லது நெய் தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். வழிபாட்டின் போது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழ்வில் வளம் கொழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஆடிப்பெருக்கு விழா, திருச்சியின் காவிரிக் கரை மற்றும் பவானி கூடுதுறை ஆகிய பகுதிகளில் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த சிறப்பு மிகுந்த நாளில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் ரங்கநாத பெருமாள், காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பு வாய்ந்ததாகும்.

காவிரி அன்னை, ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பட்டு, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்ததும், புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அம்மா மண்டபம் படித் துறைக்குக் கொண்டு வருவார்கள். மாலை வரை அங்கு வீற்றிருக்கும் பெருமாள், காவிரி அன்னைக்கு சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்கலப் பொருட்களை வழங்குவார். அந்த பொருட்கள் அனைத்தும் ஆற்றில் விடப்படும். இந்த காட்சியை காண்பவர்களுக்கு கோடி புண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.

இதே போல் தென் இந்தியாவின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலில் ஆடிப் பெருக்கு அன்று அதிகாலையிலேயே நடை திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

ராவணன் உள்ளிட்ட பல அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, என்ன செய்வது என்று வசிஷ்ட முனிவரிடம் ராமபிரான் கேட்டார். அதற்கு வசிஷ்டர், ‘அறுபத்தாறு கோடி தீர்த்தங்களையும் தன்னிடத்தில் கொண்டுள்ள காவிரி ஆறு, தென்னகத்தின் கங்கை என்று அழைக்கப்படுகிறது. எனவே அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்’ என்றார். அதன்படி ராமர், காவிரி ஆற்றில் நீராடி பாவங்களை போக்கிக் கொண்டார். ராமபிரான் காவிரியில் நீராடிய தினம் ஆடிப்பெருக்கு என்று புராண தகவல் ஒன்று தெரிவிக்கிறது.

அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவுபெறும்.

இந்த வருடம் காவிரித் தாய், வெள்ளப் பெருக்கோடு வருகிறாள். இந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுவோம்.

பிரம்ம_முகூர்த்தம் சிறப்பு

பிரம்ம  முகூர்த்தம்   சிறப்பு தெரியுமா ?

சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது.

பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது.

படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.

பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம்.

அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.

காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர்.

இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே!

எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்) என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா.

எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்.

பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இதஎப்போதுமே சுபவேளை தான்.

இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்

 உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும்.

இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.

மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப்படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது.

இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.

அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்.

எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம்.

அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம்.

அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம்.

இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது.

வணங்கத் தேவையானவை

35 காயத்ரி மந்திரங்கள்! 
ஒம் பூர்ப் புவஸ் வக
தத்ச விதுர் வரேண்யம்  
பர்கோ தேவஸ்ய தீம ஹி
தியோ யோன ப்ரசோதயாத்.

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

1. வினாயகர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி : ப்ரசோதயாத்.

2. ஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா சேநாய தீமஹி
தந்நோ சண்முக: ப்ரசோதயாத்

3. ஸ்ரீ ருத்ரர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தந்நோ ருத்ர: ப்ரசோதயாத்

4. ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி

ஓம் மஹலக்ஷ்ம்யைச வித்மஹே
விஷ்ணு பத்ந்யைச தீமஹி
தந்நோ லக்ஷ்மி: ப்ரசோதயாத்

5. ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யைச தீமஹி
தந்நோ வாணி: ப்ரசோதயாத்

6. ஸ்ரீ துர்க்கை காயத்ரி

ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யா குமரீச தீமஹி
தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்

7. ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி

ஓம் தாமோதராய வித்மஹே
ருக்மணி வல்லபாய தீமஹி
தந்நோ கிருஷ்ண: ப்ரசோதயாத்

8. ஸ்ரீ ராமர் காயத்ரி

ஓம் தசரதாய வித்மஹே
சீதா வல்லபாய தீமஹி
தந்நோ ராம: ப்ரசோதயாத்

9. ஸ்ரீ மஹாவிஷ்ணு காயத்ரி

ஓம் நாரயணாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்

10. ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி

ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்

11. ஸ்ரீ சாஸ்தா காயத்ரி

ஓம் பூத நாதாய வித்மஹே
பவ நந்தனாய தீமஹி
தந்நோ சாஸ்தா: ப்ரசோதயாத்

12. ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

13. ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்

14. ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி

ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

15. ஸ்ரீநிவாசர் காயத்ரி

ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்

16. ஸ்ரீ கருட காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்

 17. நந்தீஸ்வரர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
சக்ர துண்டாய தீமஹி
தந்நோ நந்தி: ப்ரசோதயாத்

18. ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி

ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே
தியான ஹஸ்தாய தீமஹி
தந்நோ தீசப் ப்ரசோதயாத்

19. ஸ்ரீ பிரம்ம காயத்ரி

ஓம் வேதாத்மனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம: ப்ரசோதயாத்

20. ஸ்ரீ காளி காயத்ரி

ஓம் காளிகாயைச வித்மஹே
சமசான வாசின்யை தீமஹி
தந்நோ அகோர ப்ரசோதயாத்

21. ஸ்வர்ணாகர்ஷண பைரவர் காயத்ரி

ஓம் பைரவாய வித்மஹே
ஹரிஹர ப்ரமஹாத்மகாய தீமஹி
தந்நோ ஸ்வர்ணாகர்ஷ்னபைரவப் ப்ரசோதயாத்

22. காலபைரவர் காயத்ரி

ஓம் காலத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவப் ப்ரசோதயாத்

நவக் கிரஹங்களின்
காயத்ரி மந்திரங்கள்

23. சூரிய காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்

24. சந்திர காயத்ரி

ஓம் பத்மத்வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்

25. அங்காரக காயத்ரி

ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்

26. புத காயத்ரி

ஓம் கஜத் வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்

27. குரு காயத்ரி

ஓம் விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்

28. சுக்ர காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

29. சனி காயத்ரி

ஓம் காகத் வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்

30. ராகு காயத்ரி

ஓம் நாகத்வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்

31. கேது காயத்ரி

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்

32. நவகிரஹ சாந்தி ஸ்லோகம்

ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச
குருசுக்ர சனிஸ்வராய ராகுவே கேதுவே நமஹ

33. வருண காயத்ரி

ஓம் ஜலபிம்பாய வித்மஹி
நீல் புருஷாய தீமஹி
தன்னோ வருணப் ப்ரசோதயாத்

இதை எல்லோரும் படித்தால் ரொம்ப நல்லது; நல்ல மழை பொழியணும் என்று வேண்டிக்கொண்டு சொல்லுங்கள்.

34. ஸ்ரீஅன்னபூரணி (என்றும் உணவு கிடைக்க)

ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேச்வர்யை தீமஹி
தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்

35. குபேரன்

ஓம் யட்சராஜாய வித்மஹே
வைச்ரவணாய தீமஹி
தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்.....

இவற்றிக்கு மேல் ஓன்று!

நல்லதை நினைத்தால்
நல்லதே நடக்கும்...

தோப்புக்கரணம், எதற்காக?



"பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம், எதற்காக? "

விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன.

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

"தோர்பி: கர்ணம்" என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. "தோர்பி" என்றால் "கைகளினால்" என்று அர்த்தம். 'கர்ணம்' என்றால் காது. "தோர்பி கர்ணம்" என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

விக்நேசுவரருடைய அநுக்கிரகம் இருந்தால்தான் லோகத்தில் எந்தக் காரியமும் தடையின்றி நடக்கும். தடைகளை நீக்கிப் பூரண அநுக்கிரகம் செய்கிற அழகான குழந்தைத் தெய்வம் பிள்ளையார். அவரைப் பிரார்த்தித்து, பூஜை செய்து, நாம் விக்கினங்கள் இன்றி நல்வாழ்வு வாழ்வோமாக