Sunday, 8 July 2018

பசுமை வதிலை இயக்கத்தின் பாராட்டு

பசுமை வதிலை இயக்கத்தின் பாராட்டு 

                                                  பசுமை இயக்கம்

மரம் வளர்ப்போம்  !                                                                                      மழை பெறுவோம் !!



பசுமை இயக்கம் தமிழகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ளது .இந்த பேரமைப்பில் நம் பூமியைக் காக்க வேண்டும் என்கிற அரிய நோக்கத்தோடும் சமூக அக்கறையோடும் பல நல்ல உள்ளங்கள் செயல்பட்டு வருகின்றனர் .இந்த பேரமைப்பின் ஒரு கிளை நமது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் "பசுமை வதிலை இயக்கம் " சென்ற ஆண்டு தொடங்கப் பட்டது .இந்த இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழாவில் பல துறைகளில் சமூக பணியாற்றியவர்களுக்கு பசுமை இயக்கத்தின் குறிக்கோளான மரம் நடுவோம் என்கிற வாசகங்கள் பதித்த பசுமையான மரம் விருதாக வழங்கப் பட்டது .



இவ்விழாவில் பெருந்தகையர்கள் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விருது வழங்கி சிறப்பித்தனர் .இவ்விழாவில் மருத்துவத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி தமிழக அரசின் சிறந்த மருத்துவர்  விருது பெற்று  நமது திண்டுக்கல் மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த நிலக்கோட்டை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திருமதி.பூங்கோதை செல்வராஜ் அவர்களுக்கு பசுமை வதிலை இயக்கத்தின் சார்பாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .



திண்டுக்கல் மாவட்ட SP .திரு .சக்திவேல் IPS அவர்கள் விருது வழங்கி வாழ்த்தினார்     


திருவாரூர் மருத்துவக் கல்லூரி Dean ,மருத்துவர் .திரு .மீனாட்சி சுந்தரம் MD அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார் .






நாளிதழ் செய்தி 





No comments:

Post a Comment