Monday, 30 April 2018
ஸ்ரீசக்கரம்
காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.
சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.
அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.
காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்கு தான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது.
இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்.
ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.
பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும்.
9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.
நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல. ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.
24 types of alankaaram:
Udupi Sri Krishna in 24 types of alankaaram:
1 Keshava
2 Narayan
3 Madhava
4 Govinda
5 Vishnu
6 Madhusudan
7 Trivikram
8 Vaman
9 Shridhar
10 Hrishikesh
11 Padmanabha
12 Damodar
13 Sankarshna
14 Vasudeva
15 Pradyumna
16 Aniruddha
17 Purushottam
18 Adokshaja
19 Naarasimha
20 Achyuta
21 Janardhana
22 Upendra
23 Hari
24 KrishnA
1 Keshava
2 Narayan
3 Madhava
4 Govinda
5 Vishnu
6 Madhusudan
7 Trivikram
8 Vaman
9 Shridhar
10 Hrishikesh
11 Padmanabha
12 Damodar
13 Sankarshna
14 Vasudeva
15 Pradyumna
16 Aniruddha
17 Purushottam
18 Adokshaja
19 Naarasimha
20 Achyuta
21 Janardhana
22 Upendra
23 Hari
24 KrishnA
ஒரேழுத்து மந்திரம்.!
ஒரேழுத்து மந்திரம்.!
ஆமாம், ஒரே ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?... அதனாலேதான் இந்த பதிவு...
இந்த மந்திரத்தை ”பேசாத மந்திரம்”, ”ஊமை எழுத்து”, ”நெஞ்செழுத்து”, ”மௌன அட்சரம்” “நாயோட்டு மந்திரம்” என பல பெயர்களில் சித்தர்கள் தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.
கொங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி சொல்கிறார்..
"ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு *அதற்க்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி" *
திருமூலர் இதனை “நாயோட்டு மந்திரம்” என்கிறார்.
"நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும் என்பரே
நாயோட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்ததே
நாயோட்டு மந்திரம் நாயேன்யான் விட்டிலேன்
நாயோட்டு மந்திரம் இந் நாயை வீடு சேர்க்குமே!"
- திருமூலர் -
சிவவாக்கியர் இந்த மந்திரத்தினை இப்படி குறிப்பிடுகிறார்
*"அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து சொல்ல வல்லிரேல்" *
மற்றொரு பாடலில் சிவவாக்கியர் பின்வருமாறு விளக்குகிறார்.
அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?
வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்பை இப்படிச் சொல்கிறார்.
"ஒரேழுத் தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே -அது ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே "
அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை பின் வருமாறு கூறுகிறார்.
"எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே
*எடுத்துரைக்க இவ்வுலகில் எவருமில்லை *
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே அறிந்தொமேன்பர் மௌனத்தை அவனை நீயும்
வேகாச் சாகாத தலை கால் விரைந்து கேளாய் விடுத்த அதனை உரைப்பவனே ஆசானாகும்
தேகமதில் ஒரெழுத்தை காண்பவன் ஞானி
திருநடனம் காண முத்தி சித்தியாமே!"
இத்தனை மகத்துவம் வாய்ந்த அந்த ஓரெழுத்து மந்திரம்தான் என்ன?
பிரணவ மந்திரமான ”ஓம்” காரத்தில் இந்த ஓரெழுத்து மந்திரம் ஊமை எழுத்தாக உள்ளது என்கிறார் கொங்கணவர்.
சிவவாக்கியரோ "அஞ்செழுத்தில் ஒரேழுத்து " என குறிப்பு தருகிறார். அதாவது ந ம சி வா ய என்கிற ஐந்தெழுத்தில் ஓர் எழுத்து என்கிறார்.
திருமூலரோ ”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்” என்கிறார். அது சரி!, நாயை எப்படி விரட்டுகிறோம்.....!
”ச்சீய்”....!
ஆம்! , இத்தனை மறைவாக சித்தர்கள் குறிப்பிட்ட அந்த ஓரெழுத்து மந்திரம் “சி” என்பதாகும். இதனை ”சி”காரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஓம் என்கிற ஓங்காரத்தில் இந்த ”சி” ஊமை எழுத்தாய் இருக்கிறது என கொங்கணவர் ஏன் சொன்னார்?
இதற்கான விளக்கம் பின்வரும் சிவவாக்கியர் பாடலில் கிடைக்கிறது.
அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?
அகாரமாகிய ”அ”வ்வும், உகாரமாகிய ”உ”வ்வும் சிகாரமாகிய ”சி”வ்வும் இல்லாமல் இனைய முடியாது. இது எப்படி என்பதை யோகி ஒருவரே உபதேசிக்க வேண்டும் என்கிறார். இந்த ரகசியம் காலம் காலமாய் குருமுகமாவே வழங்கப் படுகிறது. இதனையே குரு உபதேசம் என்கின்றனர்.
🙏🏻சிவாய நம🙏🏻
ஆமாம், ஒரே ஒரு எழுத்தால் ஆன மந்திரம்தான்.! மிக ஆச்சர்யமான இந்த ஓரெழுத்து மந்திரம் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?... அதனாலேதான் இந்த பதிவு...
இந்த மந்திரத்தை ”பேசாத மந்திரம்”, ”ஊமை எழுத்து”, ”நெஞ்செழுத்து”, ”மௌன அட்சரம்” “நாயோட்டு மந்திரம்” என பல பெயர்களில் சித்தர்கள் தங்கள் பாடல்களில் விளக்கியுள்ளனர்.
கொங்கணவர் இந்த மந்திரம் பற்றி இப்படி சொல்கிறார்..
"ஓம் என்ற அட்சரம் தானுமுண்டு *அதற்க்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி" *
திருமூலர் இதனை “நாயோட்டு மந்திரம்” என்கிறார்.
"நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும் என்பரே
நாயோட்டு மந்திரம் இந்நாய்க்கு மிக உகந்ததே
நாயோட்டு மந்திரம் நாயேன்யான் விட்டிலேன்
நாயோட்டு மந்திரம் இந் நாயை வீடு சேர்க்குமே!"
- திருமூலர் -
சிவவாக்கியர் இந்த மந்திரத்தினை இப்படி குறிப்பிடுகிறார்
*"அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து சொல்ல வல்லிரேல்" *
மற்றொரு பாடலில் சிவவாக்கியர் பின்வருமாறு விளக்குகிறார்.
அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?
வள்ளலாரும் இந்த மந்திரத்தின் குறிப்பை இப்படிச் சொல்கிறார்.
"ஒரேழுத் தில் ஐந்துண்டென்பார் வெண்ணிலாவே -அது ஊமை எழுத்தாவதென்ன வெண்ணிலாவே "
அகத்தியரும் இந்த மந்திரத்தின் அருமைகளை பின் வருமாறு கூறுகிறார்.
"எகமேனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்தே
*எடுத்துரைக்க இவ்வுலகில் எவருமில்லை *
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக் கொண்டே அறிந்தொமேன்பர் மௌனத்தை அவனை நீயும்
வேகாச் சாகாத தலை கால் விரைந்து கேளாய் விடுத்த அதனை உரைப்பவனே ஆசானாகும்
தேகமதில் ஒரெழுத்தை காண்பவன் ஞானி
திருநடனம் காண முத்தி சித்தியாமே!"
இத்தனை மகத்துவம் வாய்ந்த அந்த ஓரெழுத்து மந்திரம்தான் என்ன?
பிரணவ மந்திரமான ”ஓம்” காரத்தில் இந்த ஓரெழுத்து மந்திரம் ஊமை எழுத்தாக உள்ளது என்கிறார் கொங்கணவர்.
சிவவாக்கியரோ "அஞ்செழுத்தில் ஒரேழுத்து " என குறிப்பு தருகிறார். அதாவது ந ம சி வா ய என்கிற ஐந்தெழுத்தில் ஓர் எழுத்து என்கிறார்.
திருமூலரோ ”நாயோட்டு மந்திரம் நமனை வெல்லும்” என்கிறார். அது சரி!, நாயை எப்படி விரட்டுகிறோம்.....!
”ச்சீய்”....!
ஆம்! , இத்தனை மறைவாக சித்தர்கள் குறிப்பிட்ட அந்த ஓரெழுத்து மந்திரம் “சி” என்பதாகும். இதனை ”சி”காரம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
ஓம் என்கிற ஓங்காரத்தில் இந்த ”சி” ஊமை எழுத்தாய் இருக்கிறது என கொங்கணவர் ஏன் சொன்னார்?
இதற்கான விளக்கம் பின்வரும் சிவவாக்கியர் பாடலில் கிடைக்கிறது.
அகாரம் என்னும் அகரத்தில் அவ்வு வந்துதித்ததா?
உகாரம் என்னும் அகரத்தில் உவ்வு வந்துதித்ததா?
அகரமும் உகாரமும் சிகாரமின்றி நின்றதா?
விகாரமற்ற யோகிகள் விரிந்துரைக்க வேணுமே?
அகாரமாகிய ”அ”வ்வும், உகாரமாகிய ”உ”வ்வும் சிகாரமாகிய ”சி”வ்வும் இல்லாமல் இனைய முடியாது. இது எப்படி என்பதை யோகி ஒருவரே உபதேசிக்க வேண்டும் என்கிறார். இந்த ரகசியம் காலம் காலமாய் குருமுகமாவே வழங்கப் படுகிறது. இதனையே குரு உபதேசம் என்கின்றனர்.
🙏🏻சிவாய நம🙏🏻
ஞான புரிதலுக்கான தீட்சை முறைகள்
சைவத்தில் தீட்சை முறை மூன்று வகை உள்ளது அவை சமய தீட்சை, விசேஷ தீட்சை, நிர்வாண தீட்சை மேலும் இதில் ஏழு பிரிவுகள் உள்ளன.
1. ஸ்பரிச தீட்சை, இது குரு கைகளால் தொடுவதால் நிகழ்வது.
2. நயன தீட்சை, இது குரு கண்களின் மூலம் நிகழ்வது.
3. மானச தீட்சை, இது குருவுக்கும், சீடனுக்கும் சூட்சமமாக நடப்பது.
4. வாசக தீட்சை, இது குருவின் உபதேசத்தின்(சத்சங்கத்தின்) மூலம் நிகழ்வது.
5. மந்திர தீட்சை, இது குரு சொல்லி கொடுத்த மந்திரத்தால் நிகழக்கூடியது.
6. யோக தீட்சை, இது குரு சொல்லி தரும் யோக பயிற்சிகள் மூலம் நிகழ்வது.
7. ஔத்திர தீட்சை, இது யாகங்கள் செய்வதனாலும், சக்திவாய்ந்த கோவில்களுக்கும் மற்றும் சக்தி வாய்ந்த இடங்களுக்கு அதாவது மலை ஏற்றம், ஜீவசமாதிக்கு செல்வதனால் நிகழக்கூடியது.
இதில் எதுவும் உயர்ந்த, தாழ்ந்த தீட்சை என்பது கிடையாது அவரவர் இருக்கும் தன்மையை பொறுத்து தீட்சை வேலை செய்யும். சொல்லப்போனால் அவரவருக்கு என்ன தீட்சை தேவையா அந்த அந்த இடத்துக்கு அவர்களே செல்வார்கள் இந்த பிறவியில். இது அவரவர் முன் பிறவியில் விட்ட இடத்தை பொறுத்தது.
ஏன், உபதேச தீட்சை என்பது இணையதளம் மூலம் கூட கொடுக்க முடியும். Skype, Youtube, Facebook, Mobile phone மூலம் கூட நடக்கலாம். இது சாத்தியமே. இதுவும் சத்சங்கமே. இந்த முறைகள் இப்பொழுது நடந்து கொண்டும் உள்ளது.
இந்த தீட்சை முறை என்பது
குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்தான். சீடனுக்கு இருக்கும் கேள்விகளுக்கு குரு பதில் கொடுப்பார்.
ஊர் ஊராக சென்றும், ஆசிரமங்களிலும் நிறைய மக்களுக்கு சத்சங்கம் செய்வதும் உபதேச தீட்சையே.
ஊர் ஊராக சென்றும், ஆசிரமங்களில் நிறைய மக்களுக்கு சத்சங்கம் செய்வது போல்தான் இந்த இணையதள சத்சங்கமும், உபதேச தீட்சை முறையும். இதில் நிறைய மக்கள் கிடையாது ஒருவருக்கு ஒருவர் நேர்காணல் போல் இருக்கும். மற்றமுறைகளை விட இது சிறப்பாகவே இருக்கும்.
மற்றமுறைகளில் நீங்கள் நிறைய கேள்வியே கேட்க முடியாது அவர்கள் பேசுவதை மட்டும் கேட்க வேண்டும். அப்புறம் ஏதாவது விபூதியை கொடுத்துவிட்டு, ஒரு தியான முறையை கொடுப்பார்கள் புருவ மத்தியில் தியானம் செய் என்று, புருவ மத்தியில் தியானம் செய் என்பது முன்னரே மகான்கள் சொன்னதே... புதியது ஒன்றும் இருக்காது ஆனால்
ஒரு ஆளுக்கு 1000 முதல் பல லட்சம் முதல் வாங்கிவிடுவார்கள். இதனால் உங்களுக்கு தெளிவு ஏற்ப்படுவது என்பதும் மிகவும் குறைவு.
ஆனால் இணையதளம் முறையில் நிறைய கேள்வி பதில் உரையாடல் இருக்கும் நல்ல தெளிவு கிடைக்கும்.
ரமணர், ஜே.கே, சித்தவித்தை சிவானந்தர் புத்தகங்கள் எல்லாம் இந்த கேள்வி பதில் முறையில் தான் இருக்கும். ஏன் உபநிடதங்கள் எல்லாமே குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடந்த உரையாடல்தான்.
தீட்சை என்பது உங்களை உங்களது பிடிப்பில் இருந்து விடுவிப்பதே. அதாவது உங்களை உங்களது பிடிப்பில் இருந்து Unclutch செய்வதே.
அதாவது நான் என்ற தன்மையை இழக்க செய்வதே தீட்சை ஆகும்.
இப்போ இருக்கும் போலி சாமியார்கள் இந்த முறையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏன் என்றால் அவர்களின் ஆசிரம வாழ்க்கை, மற்ற சொகுசு வாழ்க்கை, புகழ், அதிகாரம், கோடி கோடியாக நன்கொடைகள் பெறுவது, விழாக்கள் என்ற பெயரில் கூத்துக்கள் அடிப்பது எல்லாம் அடிவாங்கிவிடும்.
அடுத்தது, சிலருக்கு குருவின் உபதேசத்தை கேட்டோ அல்லது புத்தகத்தை படிப்பதாலோ புரிதல் நிகழ்ந்துவிடும். நல்ல குரு மகான்களின் புத்தகம் என்பது அது அவரின் சத்சங்கம் அன்றி வேறில்லை.
இது அறிவு பூர்வமாக புரிந்து கொள்வதே இதை வைத்தே இவர்கள் நான் என்ற தன்மையை இழந்து சிறப்பாக, பிரவாகமாக வாழ்க்கையை வாழ்வார்கள். முக்தியை நோக்கியும் பயணித்து கொண்டு இருப்பார்கள். இது இவர்கள் போன பிறவியில் விட்டதை பொறுத்து நிகழ்வது.
இவர்கள் போன பிறவியிலேயே
தவ பயிற்சிகள் செய்தவராக இருப்பார்கள்.
பத்துமடை சிவானந்தர் (ரிஷிகேசில் சமாதி அடைந்தவர்) சொல்லுவார் ஒருவரின் ஞான புரிதலுக்கு புத்தகமே போதுமானது என்று. அதனாலேயே அவர் வெறும் புத்தகங்களை மட்டுமே எழுதிவிட்டு சென்றுவிட்டார். வேறு எந்த முறைகளையும் அவர் வழங்கவில்லை.
மேற்கூறிய இந்த "உபதேச தீட்சை" முறைகள் மிகவும் பக்குவப்பட்ட ஆத்மாவுக்கே சாத்தியம்.
சிலருக்கு என்ன பேசினாலும் புரியாது இவர்களுக்கு குரு மகான்கள் பயிற்சியை கொடுத்து விடுவார்கள். பயிற்சியின் மூலம் பீனியல் மற்றும் மூளை செல்கள் விழிப்புப்பெரும். இதன் பின்பு இவர்களுக்கு புரிதல் நிகழும். இதன் பின்பு இவர்கள் நான் என்ற தன்மையை இழந்து சிறப்பாக, பிரவாகமாக வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிடுவார்கள்.
அல்லது மேலே உள்ள வேறு எதாவது தீட்சை முறைகளை கொடுத்து விடுவார்கள். எப்படியோ எல்லோரையும் அடுத்த கட்டத்துக்கு அதாவது முக்தியை நோக்கி அழைத்து செல்வதே நோக்கம்.
தீட்சை நிகழ்வை ரமண மகரிஷி வேறுமாதிரி சொல்வார்,
சிலர் அடுப்பு கரி போல் இருப்பார்கள் இது பற்றிக்கொள்ள கொஞ்சம் தாமதம் ஆகும்.
சிலர் நிலக்கரி போல் இருப்பார்கள் இது கொஞ்சம் எளிதில் பற்றிக்கொள்ளும்.
சிலர் வெடிமருந்து போல் இருப்பார்கள் இது உடனே பற்றிக்கொள்ளும்.... என்பார்.
இதையே சித்தர்கள் பரிபாசையில்
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு" என்று சொல்லியுள்ளார்கள்.
இதில் இது சிறந்தது, இது தாழ்ந்தது என்பது இல்லை. எல்லோரும் அந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு வந்தவர்களே. இருப்பது கால வேறுபாடு மட்டுமே.
சிலர் புரிதல் வேறு, அனுபூதி வேறு என்பார்கள். புரிதல் எப்படி சாத்தியம் என்பார்கள். அனுபூதி எப்படி சாத்தியமோ அதுபோல் புரிதலும் சாத்தியமே. சரியான புரிதல் நிகழ்ந்தவர்கள் எளிதில் ஆன்ம அனுபூதி பெற்று விடுவார்கள்.
மிகெய்ல் நைமி என்பவர் "தி புக் ஆப் மிர்தாத்" என்ற புத்தகத்தை எழுதியவர். இவர் வெறும் எழுத்தாளரே இவர் அனுபூதி பெற்றவர் அல்ல ஆனால் இறையின் வெளிப்பாட்டை அருமையாக விளக்கி இருப்பார். இதுவே இங்கு வாழ்க்கையை ஆனந்தமாக வாழ போதுமானது. இவரை போல் நிறைய பேர் வாழ்ந்தவர்களும் உண்டு, வாழ்ந்து கொண்டு இருக்கார்கள்.
ஓஷோவும் இவரை மிகவும் பாராட்டி உள்ளார். செல்லமாகவும் இவரை திட்டுவார், ராஸ்கல் இவன் இந்த புத்தகத்தை எழுதவில்லை என்றால் நான் இதை எழுதிருப்பேன் என்று.
தியானம், வழிபாடுகள் எல்லாம் வேண்டாம் என்ற ஜே.கே வையும் ஓஷோ பாராட்டி உள்ளார், ஜே.கே சொல்வது சரிதான் ஆனால் அது எல்லோருக்கும் பொதுவானது அல்ல அதுவும் ஒரு வழி என்பார்.
ரமணரிடம் ஜே.கே சொல்வது சரியா என்று கேட்டதற்கு சரியே, அவர் போன பிறவியில் தவம் செய்தவராக இருப்பார் என்பார். அதுவே எல்லோருக்கும் பொதுவானது அல்ல என்பார்.
யோகி ராம் சுரத்குமார் (விசிறி சாமியார்), சென்னையில் ஒரு நாள் ஜே.கே வின் சத்சங்கத்திற்கு சென்று தியானம், வழிபாடு எல்லாம் ஏன் வேண்டாம் என்கிறீர்கள் என்று கேட்கலாம் என்று சென்றுள்ளார். அந்த கேள்வியை இவர் கேட்கும் முன்பு வேறு ஒருவர் கேட்டுள்ளார். இதற்க்கு ஜே.கே தியானம், வழிபாடு, சக்கரம், நாடி, மூச்சு இதை பற்றி கேட்பவர் எல்லாம் இந்த கூட்டத்தை விட்டு வெளியே சென்று விடுங்கள் இதற்கும் ஞானத்திற்கும் சம்பந்தமில்லை என்றுள்ளார். இதை கேட்ட பின்பு யோகி ராம் சுரத்குமார் அமைதியாக அமர்ந்துவிட்டார். இதன் பின்பு யோகி ராம் சுரத்குமார் சொன்னது இங்கு இறைவன் எப்போ எப்படிப்பட்ட ஞானிகள் வேண்டுமோ அவர்களை அனுப்புவார் என்று சொல்லியுள்ளார். அவருடைய வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இது உள்ளது.
ஜே.கே, சொல்வது எல்லாம் சரியே ஆனால் இந்த அறிவு பூர்வமான புரிதலில் சிலருக்கு உறுதிப்பாடு கிடைப்பது சற்று கடினம். இவர்கள் புத்தரின் 10 நாள் விபாசனா சென்றார்கள் என்றால் அனுபபூர்வமாக உறுதிப்பட்டுவிடும். ஜே.கே, சொல்வதை புத்தர் அனுபவ பூர்வமாக உணர்த்திகாட்டி விடுகிறார்.
இதில் உயர்வு தாழ்வு என்பது இல்லவே இல்லை. இது எல்லாம் அவரவர் வாசனைகளை பொறுத்தது. அவ்வளவுதான். மொத்தத்தில் எல்லோரும் இறைநிலையை நோக்கியே பயணித்து கொண்டு உள்ளோம்.
ஆன்மிகம் என்பதே அனைவரையும் முக்தியை நோக்கி அழைத்து செல்வதே இதற்க்கு பல வழிமுறைகள் உள்ளன. இந்த முறைகள் எல்லாம் அவரவர் மன அமைப்பை பொறுத்து அமைகிறது.
மனதை கடப்பதற்கு இரண்டு வழிகள். கடப்பது என்றால் எண்ணமற்ற நிலை அல்ல. எண்ணங்களின் மீது பற்றில்லாமல் பிரவாகமாக இயங்குவதே.
எண்ணத்தின் செயல் அதன் பிடியில் இல்லாமல் நம் பிடியில் இருப்பது.
அது அடிமை; நாம் எஜமான்.
ஒன்று அதை அடக்கி, அடக்கி விழிப்புணர்வு பெறுவது. இது யோகமார்க்கம்.
இரண்டாவது மனதை புரிந்து கொண்டு அதை அலட்சியபடுத்தி விழிப்புணர்வு பெறுவது.
இது ஞானமார்க்கம்.
சமாதி நிலையில் இருப்பது என்பது ஞானம் அல்ல, பிரவாகமாக இயங்குவதே ஞானம்.
"ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்"
- திருமூலர்.
ஆரம்ப நிலை சாதகருக்கு ஒரு ஸ்தூல குரு தேவைப்படலாம்.
சிலர் "தத்தாத்ரேயர்" போல இந்த பிரபஞ்சமே குருதான் என்பார்கள்.
சிலருக்கு ஸ்தூல குரு தேவைப்படாது. இவர்களுக்கு அவர்கள் மனமே குரு அவ்வளவுதான். இதைத்தான் சித்த வித்தை சிவானந்தர் சொல்லுவார். மனமே குரு என்று.
புத்தர், ரமணர், ஓஷோ, ஜே.கே, இயேசு, நபிகள் போன்ற எல்லோருக்கும் அவர்களது மனமே குரு.
குரு தொட்டு காட்டாத வித்தை சுட்டு போட்டாலும் வராது என்பார்கள். இறைவனாகிய குரு ஸ்தூலமாக வந்து தொட்டும் காட்டுவார். சூட்சமாமாக மனதின் மூலமும் தொட்டு காட்டுவார்.
ஆனால் இன்று போலிகள் ஸ்தூலத்தால் மட்டுமே தொட்டு காட்ட முடியும் என்று மக்களை குழப்பி பணம் பறித்து கொண்டுள்ளனர்.
இவை எல்லாமே அவரவர் போன பிறவியில் விட்ட இடத்தை பொறுத்ததே. இதில் எதுவும் குறையே கிடையாது.
ஞானம் எல்லா இடத்திலும் எளிமையாக உள்ளது. அறியாமையால் மறைக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இவை அனைத்தும் ஒரு திருவிளையாடலே!!!
இந்த பிரபஞ்சத்தில் எது வேண்டுமானாலும் உங்க ஸ்விட்சை ஆன் செய்துவிடும்.
புரிதல் எங்கு எப்படி நிகழும் என்று யாருக்கும் தெரியாது அதை எதிர்பார்த்தாலும் அது நடக்காது. எப்படியோ அது நிகழ்ந்துவிடுகிறது. இதன் பின்பு நான் என்ற தன்மையை இழந்து பிரவாகமாக இயங்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
இது சில கணத்தில் நிகழ்வதே.
இதன் பின்பு உங்கள் மனம் வேறு ஒரு பரிணாமத்தில் இயங்கும். அன்பும், கருணையும் இயல்பாக மாறிவிடும்.
இறை(குரு) கொடுப்பதும் கருணையால்; கொடுக்காமல் இருப்பதும் கருணையால்.
காத்திரு, நடக்க இருப்பது சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான காரணத்துடன் நடக்கும்.
- புத்தர்.
The higher power knows what to do and how to do it. Trust it.
- ரமண மகரிஷி
முக்தி அடைய ஓர் எளிய வழி
முக்தி அடைய ஓர் எளிய வழி!🌿🌿
மனிதன் பிறப்பில் இருந்து தன் வாழ் நாளில் செய்திடும் பாவபுண்ணியங்களின் பலன்களைப் பொறுத்து, இறப்புக்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து அவற்றை அனுபவிப்பதாக நமது சித்தாந்தங்கள் நம்புகின்றன. மனிதனின் பாவக் கணக்குகள் தீரும் வரையில் இந்த சுழற்சி தொடர்வதாகவும் கருதப் படுகிறது.இந்த சுழற்சியில் இருந்து விடுபட்டு குறைவில்லா இன்பத்துடன் இருந்திடும் ஒரு நிலைதான் முக்தி எனப் படுகிறது.
முக்தி நிலை என்பது மிக உயரிய குறிக்கோளாய் கூறபபடுகிறது.கடுமையான முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே ஒருவர் இந்த மேலான நிலையினை அடைந்திட முடியும்.யோகம் என்கிற எட்டு நிலைகளில் தேர்ந்து தெளிந்தால் மட்டுமே முக்தி நிலை சாத்தியமாகும்.
இத்தகைய கடினமான முக்தி நிலையினை எட்டிடும் புதிய வழி ஒன்றினை பாம்பாட்டிச் சித்தர் தனது பாடலில் பின்வருமாறு விளக்குகிறார்.
திரளான போரில்ஊசி தேடல் போல்முத்தி
சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு அவர் செயலால்
ஆனந்தம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே!
- பாம்பாட்டிச் சித்தர் -
பரந்து விரிந்த போர்களத்தில் படைகள் ஆவேசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ஊசியப் போட்டுவிட்டு மீண்டும் தேடி எடுக்க முடியாது அது போல முக்தியும் இலகுவில் கிடைக்காது. எத்தனை முயற்சிகள் கஷ்டங்கள் பட்டாலும் முக்தி என்பது அத்தனை இலகுவாகக் கிடைத்துவிடாது.
அதே நேரத்தில் இந்த உலகம் முழுவதும் எங்கும் சஞ்சரிக்கும் சித்தர்களின் அருளையும், மூலகுருவின் அருளையும்,கருணையையும் வேண்டிப் பெறுவதன் மூலமே கிடைப்பதற்க்கு அறிய முக்தியைப் பெறமுடியும். இவர்களின் மேலான அருளால் முக்தியை உணர்ந்து, ஆனந்தம் கொண்டோம் என்று ஆடு குண்டலினிப் பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
மேன்மையான குருவருளை பெறுவதன் மூலமே ஒருவர் முக்தி நிலையினை அடைந்திட முடியும் என்பது பலருக்கும் புதிய செய்திதானே..
பின்குறிப்பு:
பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் எளிமையான மொழி நடையில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பது சிற்ப்பு. ஆனால் பாம்பாட்டி சித்தரின் 129 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தமான செய்தியே.
மனிதன் பிறப்பில் இருந்து தன் வாழ் நாளில் செய்திடும் பாவபுண்ணியங்களின் பலன்களைப் பொறுத்து, இறப்புக்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து அவற்றை அனுபவிப்பதாக நமது சித்தாந்தங்கள் நம்புகின்றன. மனிதனின் பாவக் கணக்குகள் தீரும் வரையில் இந்த சுழற்சி தொடர்வதாகவும் கருதப் படுகிறது.இந்த சுழற்சியில் இருந்து விடுபட்டு குறைவில்லா இன்பத்துடன் இருந்திடும் ஒரு நிலைதான் முக்தி எனப் படுகிறது.
முக்தி நிலை என்பது மிக உயரிய குறிக்கோளாய் கூறபபடுகிறது.கடுமையான முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே ஒருவர் இந்த மேலான நிலையினை அடைந்திட முடியும்.யோகம் என்கிற எட்டு நிலைகளில் தேர்ந்து தெளிந்தால் மட்டுமே முக்தி நிலை சாத்தியமாகும்.
இத்தகைய கடினமான முக்தி நிலையினை எட்டிடும் புதிய வழி ஒன்றினை பாம்பாட்டிச் சித்தர் தனது பாடலில் பின்வருமாறு விளக்குகிறார்.
திரளான போரில்ஊசி தேடல் போல்முத்தி
சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு அவர் செயலால்
ஆனந்தம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே!
- பாம்பாட்டிச் சித்தர் -
பரந்து விரிந்த போர்களத்தில் படைகள் ஆவேசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ஊசியப் போட்டுவிட்டு மீண்டும் தேடி எடுக்க முடியாது அது போல முக்தியும் இலகுவில் கிடைக்காது. எத்தனை முயற்சிகள் கஷ்டங்கள் பட்டாலும் முக்தி என்பது அத்தனை இலகுவாகக் கிடைத்துவிடாது.
அதே நேரத்தில் இந்த உலகம் முழுவதும் எங்கும் சஞ்சரிக்கும் சித்தர்களின் அருளையும், மூலகுருவின் அருளையும்,கருணையையும் வேண்டிப் பெறுவதன் மூலமே கிடைப்பதற்க்கு அறிய முக்தியைப் பெறமுடியும். இவர்களின் மேலான அருளால் முக்தியை உணர்ந்து, ஆனந்தம் கொண்டோம் என்று ஆடு குண்டலினிப் பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
மேன்மையான குருவருளை பெறுவதன் மூலமே ஒருவர் முக்தி நிலையினை அடைந்திட முடியும் என்பது பலருக்கும் புதிய செய்திதானே..
பின்குறிப்பு:
பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் எளிமையான மொழி நடையில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பது சிற்ப்பு. ஆனால் பாம்பாட்டி சித்தரின் 129 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தமான செய்தியே.
☘சிவ சித்தாந்தம்☘
☘சிவ சித்தாந்தம்☘
🍃கல்வியும், செல்வமும், வீரமும் தரும் மந்திரங்கள்🍃
மந்திரங்கள் சூட்சும உருவாக்கம், அதற்கு பொருள் கிடையாது, ஒலிக்குறிப்புகள் உருவாக்கும் அதிர்வுகளை ஒட்டிய அறிவியல். புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இங்கே இடமில்லை. மிக நேர்த்தியாக உருவாக்கப் பட்ட எழுத்துக்களின் தொகுப்பு.அவை ஓரெழுத்தாகவும் இருக்கலாம், பல எழுத்துக்களின் தொகுப்பாயும் இருக்கலாம். அவற்றின் முறையான பிரயோகம் தரும் அல்லது உருவாக்கும் பலன் மட்டுமே சாதகனின் நோக்கமாய் இருத்தல் வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் கல்வி, செல்வம் மற்றும் வீரத்தை அருளக் கூடிய மந்திரங்களையும், அவற்றை செயலாக்கும் நுட்பத்தினையும் பார்ப்போம். அகத்தியரின், அகத்தியர்12000 என்ற் நூலில் இருந்து எடுக்கப் பட்டவை இந்த மந்திரங்கள்.
முதலில் கல்வியில் சிறக்க, கல்வியின் அதிதேவதையான சரஸ்வதியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"பாரப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்
நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி என்று
லட்சமுரு செபித்தாயானால் காணப்பா
புத்திகூர்மையா ம்வாக்குவ ன்மைசித்தே"
- அகத்தியர் 12000 -
சரஸ்வதியின் பீஜ மந்திரமான " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாகும் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாவது.
செல்வத்தின் அதி தேவதையான இலக்குமியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா
சிறப்பாக
இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே"
- அகத்தியர் 12000 -
இலக்குமியின் பீஜ மந்திரமான
"இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்"
என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் சகல செல்வங்களும் சேரும் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது -
"இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - சகல செல்வங்களும் சேருவது.
வீரத்தின் அதி தேவதையான வீரபத்திரரின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"ஆச்சப்பா வீரபத்திர மந்திர பீஜம் கேளு
அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி
என்றுலட்சம்
மாச்சலிலா செபித்துவந்தால் மைந்தா
வீரபத்திரர் வீரமய் வருவார் சார்ந்தே"
- அகத்தியர் 12000 -
வீரபத்திரரின் பீஜ மந்திரமான
"அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி"
என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது -
"அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - வீரபத்திரர் வீரமாய் துணை வருவது.
இந்த மந்திரங்களை குருமுகமாய் உபதேசம் பெற்று, விநாயக மந்திரஞ் சொல்லி மனதை ஒருமுகப் படுத்தி செயல்படுத்தும் எவரும் முறையான பலன்களை பெறலாம் என்கிறார் அகத்தியர். நம்பிக்கை இருக்கிற எவரும் இதை பயன்படுத்தி பலனடையலாம்.
🍃கல்வியும், செல்வமும், வீரமும் தரும் மந்திரங்கள்🍃
மந்திரங்கள் சூட்சும உருவாக்கம், அதற்கு பொருள் கிடையாது, ஒலிக்குறிப்புகள் உருவாக்கும் அதிர்வுகளை ஒட்டிய அறிவியல். புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இங்கே இடமில்லை. மிக நேர்த்தியாக உருவாக்கப் பட்ட எழுத்துக்களின் தொகுப்பு.அவை ஓரெழுத்தாகவும் இருக்கலாம், பல எழுத்துக்களின் தொகுப்பாயும் இருக்கலாம். அவற்றின் முறையான பிரயோகம் தரும் அல்லது உருவாக்கும் பலன் மட்டுமே சாதகனின் நோக்கமாய் இருத்தல் வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் கல்வி, செல்வம் மற்றும் வீரத்தை அருளக் கூடிய மந்திரங்களையும், அவற்றை செயலாக்கும் நுட்பத்தினையும் பார்ப்போம். அகத்தியரின், அகத்தியர்12000 என்ற் நூலில் இருந்து எடுக்கப் பட்டவை இந்த மந்திரங்கள்.
முதலில் கல்வியில் சிறக்க, கல்வியின் அதிதேவதையான சரஸ்வதியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"பாரப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்
நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி என்று
லட்சமுரு செபித்தாயானால் காணப்பா
புத்திகூர்மையா ம்வாக்குவ ன்மைசித்தே"
- அகத்தியர் 12000 -
சரஸ்வதியின் பீஜ மந்திரமான " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாகும் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாவது.
செல்வத்தின் அதி தேவதையான இலக்குமியின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"சித்தியாம் இலக்குமியின் மந்திர பீஜமப்பா
சிறப்பாக
இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்
கென்று பத்தியாய் லட்சமுரு ஓது ஓது
சகலசெல்வமும் கூடிவரும் தரணியிலேபகராதே"
- அகத்தியர் 12000 -
இலக்குமியின் பீஜ மந்திரமான
"இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்"
என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் சகல செல்வங்களும் சேரும் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது -
"இடாயி இடாயி டாகினி டிடிடி றீங்".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - சகல செல்வங்களும் சேருவது.
வீரத்தின் அதி தேவதையான வீரபத்திரரின் மந்திரத்தையும், அதனை செயல்படுத்தி பயனடையும் உத்தியை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.
"ஆச்சப்பா வீரபத்திர மந்திர பீஜம் கேளு
அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி
என்றுலட்சம்
மாச்சலிலா செபித்துவந்தால் மைந்தா
வீரபத்திரர் வீரமய் வருவார் சார்ந்தே"
- அகத்தியர் 12000 -
வீரபத்திரரின் பீஜ மந்திரமான
"அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி"
என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் வீரபத்திரர் வீரமாய் துணை வருவார் எகிறார் அகத்தியர்.
இதில் மந்திரம் என்பது -
"அகோராயா வீரவீரபுரபுர அரிஅரி".
மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
மந்திரசித்தி என்பது - வீரபத்திரர் வீரமாய் துணை வருவது.
இந்த மந்திரங்களை குருமுகமாய் உபதேசம் பெற்று, விநாயக மந்திரஞ் சொல்லி மனதை ஒருமுகப் படுத்தி செயல்படுத்தும் எவரும் முறையான பலன்களை பெறலாம் என்கிறார் அகத்தியர். நம்பிக்கை இருக்கிற எவரும் இதை பயன்படுத்தி பலனடையலாம்.
சித்தர்கள் மனிதர்களுக்கு அருள எளிதில் ஏன் வருவதில்லை?
சித்தர்கள் மனிதர்களுக்கு அருள எளிதில் ஏன் வருவதில்லை?
தென்னாடுடய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
சித்தர்கள் ஏன் மனிதர்கள் முன்னால் வருவதில்லை??? வந்து மனிதனின் நன்மைக்காக தங்கள் அட்டமாசித்திகளை பயன்படுத்தலாமே!!! வந்தால் என்ன ஆகும்???
இந்த கேள்விக்கான பதில்...
பலகாயக்கலை என்று சொல்லப்பட்ற கூடு விட்டு கூடு பாய்கின்ற கலை சித்தர்களுக்கே உரியது. 18 சித்தர்களும் இதில் கைதேர்ந்தவர்கள். அவர்களுள் ஒருவர் திருமூலர் (எல்லோரும் நன்கு அறிந்த திருமந்திரத்தை இயற்றியவர் தான்). அவர் மக்கள் நன்மைக்காக களமிறங்கியதில் என்ன ஆயிற்று தெரியுமா??
திருமூலர் ஒருமுறை ஆகாய மார்க்கமாக சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிக்க சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆகாய மார்க்கமாக வந்த ஒரு அரைசித்தர் (சித்திகளில் முழுமை அடையாதவர், உப சித்தர் என்றும் கூறலாம்) திருமூலரை வணங்கி நின்றார். அவர் முகம் வாடியிருந்தது. அதை கண்ட திருமூலர், காரணத்தை வினவினார். உபசித்தர் திருமூலரிடம், சித்தராய் இருப்பது ஆனந்தம் அளித்தாலும் நம்மால் மக்களுக்கு எந்த பயனும் இல்லையே, சித்தர்கள் ஏன் மக்களின் துயரம் போக்க முன்வருவதில்லை??
‘மக்களின் சேவயே மகேசன் சேவை’யல்லவா!!! என்றெல்லாம் புலம்பினார்.
உபசித்தர் குழப்பத்தில் உள்ளார். முழு சித்தர் அகாததே இதற்கு காரணம் என்பதை தன் ஞானத்தால் கண்டார் திருமூலர். ஏனெனில் முழுமையடந்த சித்தன் கவலை,துக்கம்,மகிழ்ச்சி முதலானவற்றை கடந்தவன். உபசித்தருக்கு இந்த எண்ணம் தோன்ற காரணம் யாதோ என கேட்டார் திருமூலர்.
அதற்கு அவர் இந்த நாட்டின் மன்னன் தன் இளவயதிலே அற்ப ஆயுளால் வேட்டைக்கு சென்று அரவு (பாம்பு) தீண்டி இறந்து கிடப்பதை பாருங்கள் என்று காட்டினார். இவனுக்கு வாரிசு இல்லை. சில தினங்களில் எதிர் நாட்டு அரசன் போர்தொடுத்து வரவுள்ளான். இந்நாட்டை யார் காப்பது. சித்தர்கள் நாம் ஏன் இதை நம் கடமயாக கொள்ள கூடாது என்றவாறு கேட்டார்
திரிகால ஞானியான திருமூலர் நடக்கவிருப்பதை அறிந்தும் எதுவும் அறியாதவர் போல உதவலாமே என ஒப்புகொண்டு, விஷமேறிய அந்த அரசன் உடலை மூலிகயால் சுத்தப்படுத்தி தனது பலகாய சித்தியினால் அரசன் உடல் புகுந்தார். தனது பிறப்பு உடலை சதுரகிரியின் மலையில் ஒரு குகையினுல்
மறைத்து வைத்தார். அரசனாகி மாளிகைக்கு சென்றார். மக்களுக்கான நற்பனிகளை செய்தார்.
அரசனுக்கோ புதிதாக திருமணம் முடிந்திருந்தது. அரசன் மனைவி தன்னிடம் நெருங்கும்பொதெல்லம் விலகிச்சென்றார் திருமூலர். அரசரின் நடவடிக்கயில் மாற்றம் தெரிவது கண்டு அவரிடம் அவள் கேட்டதில் திருமூலர் நடந்ததை கூறினார். மக்களின் நன்மைக்காகவே நான் உன் கனவன் உடல் ஏந்தியிருக்கிறேன் என்றும், போர் முடிந்ததும் நல்லதகுதியனவனை அரசனாக்கிவிட்டு இவ்வுடலை விட்டு பிரிந்து விடுவதகவும் கூறினார். இதை கேட்ட அரசனின் மனைவி அதிர்ச்சியுற்றாள். அழுது புலம்பினாள்.
ஊர் அரிய தான் விதவை கோலமுறுவதை என்னி அச்சமடைந்தாள். அது நடவாமலிருக்கவும் அரசு அழியாமல் இருக்கவும் ஒரு உபாயம் தேடினாள். திருமூலரின் உன்மயான உடலை அழித்துவிட்டால் அவர் இங்கேயே தங்கி விடுவார் என எண்ணி ஆட்களை அனுப்பி அவரின் உடலை கண்டுபிடித்து தீயில் சுட்டு எரித்தாள்.
தன் உடல் அழிந்ததை அறிந்த திருமூலர் அவ்வரசை விட்டு வெளியெறி உபசித்தரை அடைந்து, கண்டீர்களா உபசித்தரே இந்த மனிதர்களின் எண்ணத்தயும் செயலையும், இவர்களுக்கா நல்லது நினைத்தீர்கள்!! உங்களுக்கு வந்த இந்த கவலை வேறு சித்தர் எவருக்கும் வரமலிருக்கவே
நடக்கவிருப்பதை அறிந்தும் நான் அனைத்தயும் நடத்தினேன் என்று கூறினார். உபசித்தர் தன் செயலுக்காக வருந்தினார்.
சொந்த உடல் கிடைக்கப்பெறாத திருமூலர், அரசனின் உடலை தூய்மைபடுத்தி அதன் மூலமே சஞ்சரித்தார். விதியின் காரனத்தால் திருமூலரின் ஆயுள் முடிவடய அவர் உடல் அழிந்தது. அதனால்
இறைவனோடு கலந்து இறவா நிலை பெற்ற அவர் ஆன்மா வேறு உடலை தனதாக்கி கொண்டது.
மனிதரின் நன்மை கருதிய சித்தரின் நிலை பார்த்தீர்களா...?!! இதனால்தான் சித்தர்கள் அவ்வளவு எளிதில் காட்சி தருவதில்லை. சிவனே கதி என்று தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்கின்றனர்.
ஓம் நம சிவாய!!!
தென்னாடுடய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
சித்தர்கள் ஏன் மனிதர்கள் முன்னால் வருவதில்லை??? வந்து மனிதனின் நன்மைக்காக தங்கள் அட்டமாசித்திகளை பயன்படுத்தலாமே!!! வந்தால் என்ன ஆகும்???
இந்த கேள்விக்கான பதில்...
பலகாயக்கலை என்று சொல்லப்பட்ற கூடு விட்டு கூடு பாய்கின்ற கலை சித்தர்களுக்கே உரியது. 18 சித்தர்களும் இதில் கைதேர்ந்தவர்கள். அவர்களுள் ஒருவர் திருமூலர் (எல்லோரும் நன்கு அறிந்த திருமந்திரத்தை இயற்றியவர் தான்). அவர் மக்கள் நன்மைக்காக களமிறங்கியதில் என்ன ஆயிற்று தெரியுமா??
திருமூலர் ஒருமுறை ஆகாய மார்க்கமாக சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிக்க சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆகாய மார்க்கமாக வந்த ஒரு அரைசித்தர் (சித்திகளில் முழுமை அடையாதவர், உப சித்தர் என்றும் கூறலாம்) திருமூலரை வணங்கி நின்றார். அவர் முகம் வாடியிருந்தது. அதை கண்ட திருமூலர், காரணத்தை வினவினார். உபசித்தர் திருமூலரிடம், சித்தராய் இருப்பது ஆனந்தம் அளித்தாலும் நம்மால் மக்களுக்கு எந்த பயனும் இல்லையே, சித்தர்கள் ஏன் மக்களின் துயரம் போக்க முன்வருவதில்லை??
‘மக்களின் சேவயே மகேசன் சேவை’யல்லவா!!! என்றெல்லாம் புலம்பினார்.
உபசித்தர் குழப்பத்தில் உள்ளார். முழு சித்தர் அகாததே இதற்கு காரணம் என்பதை தன் ஞானத்தால் கண்டார் திருமூலர். ஏனெனில் முழுமையடந்த சித்தன் கவலை,துக்கம்,மகிழ்ச்சி முதலானவற்றை கடந்தவன். உபசித்தருக்கு இந்த எண்ணம் தோன்ற காரணம் யாதோ என கேட்டார் திருமூலர்.
அதற்கு அவர் இந்த நாட்டின் மன்னன் தன் இளவயதிலே அற்ப ஆயுளால் வேட்டைக்கு சென்று அரவு (பாம்பு) தீண்டி இறந்து கிடப்பதை பாருங்கள் என்று காட்டினார். இவனுக்கு வாரிசு இல்லை. சில தினங்களில் எதிர் நாட்டு அரசன் போர்தொடுத்து வரவுள்ளான். இந்நாட்டை யார் காப்பது. சித்தர்கள் நாம் ஏன் இதை நம் கடமயாக கொள்ள கூடாது என்றவாறு கேட்டார்
திரிகால ஞானியான திருமூலர் நடக்கவிருப்பதை அறிந்தும் எதுவும் அறியாதவர் போல உதவலாமே என ஒப்புகொண்டு, விஷமேறிய அந்த அரசன் உடலை மூலிகயால் சுத்தப்படுத்தி தனது பலகாய சித்தியினால் அரசன் உடல் புகுந்தார். தனது பிறப்பு உடலை சதுரகிரியின் மலையில் ஒரு குகையினுல்
மறைத்து வைத்தார். அரசனாகி மாளிகைக்கு சென்றார். மக்களுக்கான நற்பனிகளை செய்தார்.
அரசனுக்கோ புதிதாக திருமணம் முடிந்திருந்தது. அரசன் மனைவி தன்னிடம் நெருங்கும்பொதெல்லம் விலகிச்சென்றார் திருமூலர். அரசரின் நடவடிக்கயில் மாற்றம் தெரிவது கண்டு அவரிடம் அவள் கேட்டதில் திருமூலர் நடந்ததை கூறினார். மக்களின் நன்மைக்காகவே நான் உன் கனவன் உடல் ஏந்தியிருக்கிறேன் என்றும், போர் முடிந்ததும் நல்லதகுதியனவனை அரசனாக்கிவிட்டு இவ்வுடலை விட்டு பிரிந்து விடுவதகவும் கூறினார். இதை கேட்ட அரசனின் மனைவி அதிர்ச்சியுற்றாள். அழுது புலம்பினாள்.
ஊர் அரிய தான் விதவை கோலமுறுவதை என்னி அச்சமடைந்தாள். அது நடவாமலிருக்கவும் அரசு அழியாமல் இருக்கவும் ஒரு உபாயம் தேடினாள். திருமூலரின் உன்மயான உடலை அழித்துவிட்டால் அவர் இங்கேயே தங்கி விடுவார் என எண்ணி ஆட்களை அனுப்பி அவரின் உடலை கண்டுபிடித்து தீயில் சுட்டு எரித்தாள்.
தன் உடல் அழிந்ததை அறிந்த திருமூலர் அவ்வரசை விட்டு வெளியெறி உபசித்தரை அடைந்து, கண்டீர்களா உபசித்தரே இந்த மனிதர்களின் எண்ணத்தயும் செயலையும், இவர்களுக்கா நல்லது நினைத்தீர்கள்!! உங்களுக்கு வந்த இந்த கவலை வேறு சித்தர் எவருக்கும் வரமலிருக்கவே
நடக்கவிருப்பதை அறிந்தும் நான் அனைத்தயும் நடத்தினேன் என்று கூறினார். உபசித்தர் தன் செயலுக்காக வருந்தினார்.
சொந்த உடல் கிடைக்கப்பெறாத திருமூலர், அரசனின் உடலை தூய்மைபடுத்தி அதன் மூலமே சஞ்சரித்தார். விதியின் காரனத்தால் திருமூலரின் ஆயுள் முடிவடய அவர் உடல் அழிந்தது. அதனால்
இறைவனோடு கலந்து இறவா நிலை பெற்ற அவர் ஆன்மா வேறு உடலை தனதாக்கி கொண்டது.
மனிதரின் நன்மை கருதிய சித்தரின் நிலை பார்த்தீர்களா...?!! இதனால்தான் சித்தர்கள் அவ்வளவு எளிதில் காட்சி தருவதில்லை. சிவனே கதி என்று தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்கின்றனர்.
ஓம் நம சிவாய!!!
மும்மூர்த்திகளும் வாழைப்பழமும்"
மும்மூர்த்திகளும் வாழைப்பழமும்"
"பூவன் பழம்" :--
பூவன் என்றால் பிரம்மன். திருமாலின் நாபி கமலத்திலிருந்து பிறந்தவர்.
வயிற்று கோளாறு, மலச்சிக்கல் போன்றவை நீக்கி உடலுக்கு புது சக்தி உண்டு பண்ணுகிறது.
"மொந்தன் பழம்" :--
இதன் சரியான பெயர் முகுந்தன் பழம். காத்தல் தொழிலையுடைய திருமாலுக்கு "முகுந்தன்" என்று பெயர். திருமாலின் நிறமான மரகதப் பச்சை நிறமுடையது.
இந்த பழம் சத்து நிறைந்தது. உடலை காப்பதால் முகுந்தன் பழம் ஆனது.
"பேயன் பழம்":--
பேய்களுடன் ஆடுவதால் பேயன் என்ற பெயர், சிவனுக்கு உண்டு. அம்மை, மூலம் போன்ற நோய்களை இப்பழம் அழிக்கும்
"பூவன் பழம்" :--
பூவன் என்றால் பிரம்மன். திருமாலின் நாபி கமலத்திலிருந்து பிறந்தவர்.
வயிற்று கோளாறு, மலச்சிக்கல் போன்றவை நீக்கி உடலுக்கு புது சக்தி உண்டு பண்ணுகிறது.
"மொந்தன் பழம்" :--
இதன் சரியான பெயர் முகுந்தன் பழம். காத்தல் தொழிலையுடைய திருமாலுக்கு "முகுந்தன்" என்று பெயர். திருமாலின் நிறமான மரகதப் பச்சை நிறமுடையது.
இந்த பழம் சத்து நிறைந்தது. உடலை காப்பதால் முகுந்தன் பழம் ஆனது.
"பேயன் பழம்":--
பேய்களுடன் ஆடுவதால் பேயன் என்ற பெயர், சிவனுக்கு உண்டு. அம்மை, மூலம் போன்ற நோய்களை இப்பழம் அழிக்கும்
வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்.
வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவேண்டிய சிவஸ்தலம்..!
ஒரு வருடம் பழமும்,
ஒரு வருடம் சருகும்,
ஒரு வருடம் தண்ணீரும்,
ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள்.
ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.
எதுவுமே இங்கு தேவையில்லை.
ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும்.
பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.
இங்கு ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும்,
இரண்டு நாள் தங்கினால்
இப்பிறப்பில் செய்த பாவமும்,
மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்.
ஞாயிறன்று இங்கு சூரியனை
மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர்.
திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.
செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.
புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர்.
வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.
வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர்.
சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.
அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்
ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்
நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்
பிறரை ஏமாற்றியிருந்தால் ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்
இந்த ஸ்தலலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.
இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.
சிவகணங்களில் நந்ததீஸ்வரர் நவரத்தினங்களில் வைரமும் ராசிகளில் சிம்மமும் தேவர்கலில் இந்திரனும் மிருகங்களில் கஸ்தூரி பூனையும் இலைகளில் வில்வமும் பாணங்களில் பாசுபதாஸ்திரமும் சக்திகளில் உமாதேவியும் பூக்களில் தாமரையும் குருக்களில் வியாழ பகவானும் முனிவர்களில் அகத்தியரும் பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ அதுபோல் தலங்களைலேயே வரராசை தான் உயர்ந்தது.
இதற்கு புன்னைவனம் சீரரசை என்றும் பெயருண்டு.
இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும்.
ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால் தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும்
இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.
இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தான்ம் செய்த பாக்கியம் கிடைக்கும்.
இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர்.
இத்தலம் எதுவென
இன்னும் புரியவில்லையா?
சங்கரனாகிய சிவனும்
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கர நாராயணர் கோயில் தான் அது.
உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்…
இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்
வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.
இத்தலத்திற்கு
எப்படி செல்வது?
சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஒரு வருடம் பழமும்,
ஒரு வருடம் சருகும்,
ஒரு வருடம் தண்ணீரும்,
ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள்.
ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது.
எதுவுமே இங்கு தேவையில்லை.
ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும்.
பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.
இங்கு ஒரு நாள் தங்கினால்
முற்பிறவியில் செய்த பாவமும்,
இரண்டு நாள் தங்கினால்
இப்பிறப்பில் செய்த பாவமும்,
மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்.
ஞாயிறன்று இங்கு சூரியனை
மனதில் நினைத்து விரதமிருப்பவர் கண் வியாதியின்றி இருப்பர்.
திங்களன்று சந்திரனை நினைத்து விரதமிருப்பவர் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர்.
செவ்வாயன்று விரதமிருப்பவர் நோய் மற்றும் சனிதோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறுவர்.
புதனன்று விரதமிருப்பவர் கல்வியில் சிறப்பாகத் திகழ்வர்.
வியாழனன்று விரதமிருந்தால் ஆசிரியர் பதவி பெறலாம்.
வெள்ளியன்று விரதமிருப்போர் இந்திரனைப்போல் செல்வவளத்துடன் வாழ்வர்.
சனிக்கிழமை விரதமிருப்பவர் பொறாமை முதலிய துர்குணங்கள் நீங்கப்பெறுவர்.
அப்பாவை கோபத்தில் அடித்திருந்தால்
ஆசிரியரை நிந்தனை செய்திருந்தால்
நம்மை நம்பி பிறர் கொடுத்த பொருளை திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றியிருந்தால்
பிறரை ஏமாற்றியிருந்தால் ஏழைகளுக்கு தானம் செய்யாமல் பாவம் செய்திருந்தால்
இந்த ஸ்தலலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கிவிடும்.
இக்கோயிலில் புற்றுமண்ணே பிரசாதம். இதை அத்தலத்து இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம்.
சிவகணங்களில் நந்ததீஸ்வரர் நவரத்தினங்களில் வைரமும் ராசிகளில் சிம்மமும் தேவர்கலில் இந்திரனும் மிருகங்களில் கஸ்தூரி பூனையும் இலைகளில் வில்வமும் பாணங்களில் பாசுபதாஸ்திரமும் சக்திகளில் உமாதேவியும் பூக்களில் தாமரையும் குருக்களில் வியாழ பகவானும் முனிவர்களில் அகத்தியரும் பிள்ளைகளில் பகீரதனும் எப்படி உயர்ந்ததோ அதுபோல் தலங்களைலேயே வரராசை தான் உயர்ந்தது.
இதற்கு புன்னைவனம் சீரரசை என்றும் பெயருண்டு.
இங்கே ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால் மற்ற தலங்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும்.
ஒரு பசுவை பிராமணருக்கு தானம் செய்தால் தேவலோகத்து காமதேனுவே அவர்களுக்கு பணிவிடை செய்ய வரும்
இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு.
இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தான்ம் செய்த பாக்கியம் கிடைக்கும்.
இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்கிறார் புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர்.
இத்தலம் எதுவென
இன்னும் புரியவில்லையா?
சங்கரனாகிய சிவனும்
நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் சங்கர நாராயணர் கோயில் தான் அது.
உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயில்…
இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன்
வாழ்வில் ஒரு முறையாவது இங்கே சென்று இறைவனின் பேரருளை பெற்று வந்து விடுங்கள்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில்.
இத்தலத்திற்கு
எப்படி செல்வது?
சங்கரன்கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 58 கி.மீ தொலைவில் உள்ளது.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
கருப்பட்டி. ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து
கருப்பட்டி. ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து!
பாரம்பரியத்தில் வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு விஷயமாகும். ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி / வெல்லம் / கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதே இல்லை.
இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி.சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.
“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு
தேவையானதை தேவைப்படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி. உடல் இயக்கத்தை
சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.
கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின்
மருத்துவ பயன்கள்
சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன்.இந்த பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்
அளவில்லாதது.அதனை தற்போது பார்ப்போம்.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.
கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.
சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்…கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.
கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்
மேனிபளபளப்பை பெறும்.
கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்
சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்
ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்
நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.
குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.
சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது.
சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்
அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கும் நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்.
பாரம்பரியத்தில் வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு விஷயமாகும். ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி / வெல்லம் / கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதே இல்லை.
இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் கருப்பட்டி.சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.
“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு
தேவையானதை தேவைப்படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி. உடல் இயக்கத்தை
சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.
கருப்பட்டி என்னும் பனைவெல்லத்தின்
மருத்துவ பயன்கள்
சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக கருப்பட்டி நம் நெருங்கிய நண்பன்.இந்த பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்
அளவில்லாதது.அதனை தற்போது பார்ப்போம்.பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.
குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன.
கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.
சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்…கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது. கருப்பட்டியை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்புகின்றனர்.
கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்
மேனிபளபளப்பை பெறும்.
கருப்பட்டியில் சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தமடையும்
சீரகத்தை வறுத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்
ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
கரும்புசக்கரைக்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும்எலும்புகளும் உறுதியாகும்
நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கைகுத்தல்அரிசிசாதத்துடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.
குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கிறது.
சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது.
சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும்
அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கும் நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்.
மே 1 ,
மே 1 ,
கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ? நாம் என்ன செய்ய வேண்டும் ? நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம் . கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம் . கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம் .
சட்டசபைக்கு இணையான வலிமை= கிராமசபையை பயண்படுத்த வாரீர் வாரீர் .....
1. ஜனநாயக திருவிழாவை மே-1 கிராம சபையில் கொண்டாட வாருங்கள் அனைவரும் .
2. பஞ்சாயத்து தலைவராக நினைப் போரை கிராம சபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .
3. அரசியல் ஆசைஉள்ளோரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .
4. Ex பஞ்சாயத்து தலைவரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .
5. Ex வார்டு மெம்பரை கிராம சபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .
6. மே-1 கிராமசபை கூட்டத்துக்கு வரும் தலைவனுக்கு ஓட்டு போடுங்கள் .
7. மே-1 நம் கிராமம் மீது அக்கறை இல்லாமல் கிராம சபை கூட்டத்துக்கு வராத தலைவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் .
8. ஊழல் புரியும் ஊராட்சி செயலாளரின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராம சபை கூட்டத்துக்கு வாருங்கள்.
9. மண் வெட்டியதாக பணத்தை எடுப்பவர்களை ஆய்வு செய்ய சரியான தருணம் மே-1.
10. கிராம சபை கூட்டத்தில் அரசு அலுவலர் தரையில்தான் உட்கார வேண்டும் .
11. மே 1 கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதை உறுதி செய்வோம் .
12. கிராம சபை கூட்டத்துக்கு செல்லும் முன் ஆன்லைனில் வரவு செலவு விபரங்களை டவுன்லோடு செய்யுங்கள் .
13. ஓட்டுப் போடு வதைப் போல முக்கியத்துவம் வாய்ந்தது - மே 1 .
14. கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிராமத்தின் வளர்ச்சியை அழிக்க துணை போகாதிருங்கள் .
15. பேருந்து வசதி குறித்து மே-1 கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் ஏற்றுங்கள் .
16. இலவச வீடு வேண்டுவோர் மே-1 கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள் .
17. மே-1 உங்கள் கிராமத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுக்கான நாள் .
18. மே-1 கிராம சபையில் சாக்கடை கால்வாய் அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்.
19. மே-1 கிராம சபையில் குளம்,ஏரி தூர்வார்வது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள் .
20. மே-1 கிராம சபையில் குடிநீர் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் ஏற்றுங்கள் .
21. ஐனவரி-26 க்கு பின்பு உள்ள செலவு விபரங்களை மே-1 கிராம சபையில் உங்கள் ஒப்புதல் பெற்றதாக கையெழுத்து வாங்க போவது எத்தனை பேருக்கு தெரியும் ?
22. மே-1 கிராம சபையின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் தெரிந்து கொண்டு கிராமத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும்.
23. உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பத தவிர்க்க மே-1 கிராம சபைக்கு வாருங்கள் .
24. கிராம சபை கூட்டத்தை தகுந்த காரணத்தோட நிறுத்தினால் மாவட்ட ஆட்சியரை உங்கள் கிராமத்திற்கு வரவைக்கலாம் .
25. நேரலை கிராம சபை கூட்டத்தை முடிந்தவரை முகநூலில் நேரலையாக பரப்புவோம் .
26. 501 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவியுங்கள் .
27. அரசு இ-சேவை மையம் தொடங்க தீர்மானம் ஏற்ற வாருங்கள் .
28. நமது கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்றால் நம் கிராமத்திற்க்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.
29.கிராம சபை கூட்டத்தில் போய் உட்காருவது ! நமது கடமை .
30. நல்ல பணி தட
பொருப்பாளரை கிராமசபை கூட்டத்தில் விவாதித்து தேர்ந்தெடுப்போம் .
31. உங்கள் கிராமத்தின் தேவைகளை மட்டும் தெரிந்தெடுக்க சரியான தருணம் மே-1 கிராம சபை .
32. புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தீர்மானம் ஏற்ற கிராம சபை கூட்டத்துக்கு வாருங்கள் .
33 . கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சியை பன்மடங்கு ஆக்க வாருங்கள் .
34 . இலவச வீடு வேண்டுவோர் மே-1 கிராம சபை கூட்டத்துக்கு வாருங்கள் .
35 . கேள்வி கேட்டல்தான் அரசுக்கு அச்சம் வரும் என்றால் அதற்கான சரியான தருணம் மே-1 கிராம சபை கூட்டம் .
36 . உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க !
37 . வீண் செலவுகளுக்கு ஒப்புதல் கையெழுத்து எக்காரணம் கொண்டு போடாமல் தடுப்போம் .
38 . ரேசன் கார்டு, பட்டா மாறுதல், வருவாய் துறை சார்ந்த வருமான, இருப்பிட, சாதி சான்றுகளை, பல்வேறு இணைய வழி சேவைகள் அனைத்தும் நமது கிராமத்தில் வழங்க கிராம சேவை மையங்கள் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
இதன் மூலம் நாம் இணையம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் நமது கிராமத்தில் லஞ்சமில்லாமல் பெற முடியும்.
ஒரு கிராமத்திற்கு ஐந்து ஆண்டுக்கு 4 1/2 கோடி ருபாய் வழங்கப்படுகிறது.
உங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயண்படுத்த படுகிறதா ?
என்னென்ன பணிகள் நடைபெற்றது ?
தரமான பொருட்கள் உபயோகப்படுத்த பட்டுள்ளதா ?
என்ற கேள்விகளை எழுப்புங்கள் !
கிராம சபையில் அதிகாரம் மக்களுக்கே !
உள்ளாட்சி அதிகாரங்களில், கிராம சபைகள் என்பது ஒரு சட்ட பிரிவு மட்டும்தான். அது வலிமையானது.
கிராமசபை கூட்டத்தின் பயன் என்ன ? நாம் என்ன செய்ய வேண்டும் ? நம் கிராம வளர்ச்சிக்கு நாமே சட்டம் இயற்றுவோம் . கேள்விகளை கேட்போம் உரிமைகளை பெறுவோம் . கிராமசபையின் தீர்மானமே அந்த கிராமத்தின் சட்டம் .
சட்டசபைக்கு இணையான வலிமை= கிராமசபையை பயண்படுத்த வாரீர் வாரீர் .....
1. ஜனநாயக திருவிழாவை மே-1 கிராம சபையில் கொண்டாட வாருங்கள் அனைவரும் .
2. பஞ்சாயத்து தலைவராக நினைப் போரை கிராம சபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .
3. அரசியல் ஆசைஉள்ளோரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .
4. Ex பஞ்சாயத்து தலைவரை கிராமசபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .
5. Ex வார்டு மெம்பரை கிராம சபை கூட்டத்துக்கு வர சொல்லுங்கள் .
6. மே-1 கிராமசபை கூட்டத்துக்கு வரும் தலைவனுக்கு ஓட்டு போடுங்கள் .
7. மே-1 நம் கிராமம் மீது அக்கறை இல்லாமல் கிராம சபை கூட்டத்துக்கு வராத தலைவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் .
8. ஊழல் புரியும் ஊராட்சி செயலாளரின் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிராம சபை கூட்டத்துக்கு வாருங்கள்.
9. மண் வெட்டியதாக பணத்தை எடுப்பவர்களை ஆய்வு செய்ய சரியான தருணம் மே-1.
10. கிராம சபை கூட்டத்தில் அரசு அலுவலர் தரையில்தான் உட்கார வேண்டும் .
11. மே 1 கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதை உறுதி செய்வோம் .
12. கிராம சபை கூட்டத்துக்கு செல்லும் முன் ஆன்லைனில் வரவு செலவு விபரங்களை டவுன்லோடு செய்யுங்கள் .
13. ஓட்டுப் போடு வதைப் போல முக்கியத்துவம் வாய்ந்தது - மே 1 .
14. கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிராமத்தின் வளர்ச்சியை அழிக்க துணை போகாதிருங்கள் .
15. பேருந்து வசதி குறித்து மே-1 கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் ஏற்றுங்கள் .
16. இலவச வீடு வேண்டுவோர் மே-1 கிராமசபை கூட்டத்துக்கு வாருங்கள் .
17. மே-1 உங்கள் கிராமத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் விடிவுக்கான நாள் .
18. மே-1 கிராம சபையில் சாக்கடை கால்வாய் அமைப்பது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள்.
19. மே-1 கிராம சபையில் குளம்,ஏரி தூர்வார்வது குறித்து தீர்மானம் ஏற்றுங்கள் .
20. மே-1 கிராம சபையில் குடிநீர் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் ஏற்றுங்கள் .
21. ஐனவரி-26 க்கு பின்பு உள்ள செலவு விபரங்களை மே-1 கிராம சபையில் உங்கள் ஒப்புதல் பெற்றதாக கையெழுத்து வாங்க போவது எத்தனை பேருக்கு தெரியும் ?
22. மே-1 கிராம சபையின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் தெரிந்து கொண்டு கிராமத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும்.
23. உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பத தவிர்க்க மே-1 கிராம சபைக்கு வாருங்கள் .
24. கிராம சபை கூட்டத்தை தகுந்த காரணத்தோட நிறுத்தினால் மாவட்ட ஆட்சியரை உங்கள் கிராமத்திற்கு வரவைக்கலாம் .
25. நேரலை கிராம சபை கூட்டத்தை முடிந்தவரை முகநூலில் நேரலையாக பரப்புவோம் .
26. 501 பேர் கொண்ட கிராமத்தில் கிராமசபை கூட்டத்தில் 100 நபருக்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு தெரிவியுங்கள் .
27. அரசு இ-சேவை மையம் தொடங்க தீர்மானம் ஏற்ற வாருங்கள் .
28. நமது கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்றால் நம் கிராமத்திற்க்கு நாம் செய்யும் துரோகம் ஆகும்.
29.கிராம சபை கூட்டத்தில் போய் உட்காருவது ! நமது கடமை .
30. நல்ல பணி தட
பொருப்பாளரை கிராமசபை கூட்டத்தில் விவாதித்து தேர்ந்தெடுப்போம் .
31. உங்கள் கிராமத்தின் தேவைகளை மட்டும் தெரிந்தெடுக்க சரியான தருணம் மே-1 கிராம சபை .
32. புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு தீர்மானம் ஏற்ற கிராம சபை கூட்டத்துக்கு வாருங்கள் .
33 . கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு கிராமத்தின் வளர்ச்சியை பன்மடங்கு ஆக்க வாருங்கள் .
34 . இலவச வீடு வேண்டுவோர் மே-1 கிராம சபை கூட்டத்துக்கு வாருங்கள் .
35 . கேள்வி கேட்டல்தான் அரசுக்கு அச்சம் வரும் என்றால் அதற்கான சரியான தருணம் மே-1 கிராம சபை கூட்டம் .
36 . உங்களின் வரிப்பணத்தை உன் கிராமத்தில் வீணடிப்பதை தவிர்க்க !
37 . வீண் செலவுகளுக்கு ஒப்புதல் கையெழுத்து எக்காரணம் கொண்டு போடாமல் தடுப்போம் .
38 . ரேசன் கார்டு, பட்டா மாறுதல், வருவாய் துறை சார்ந்த வருமான, இருப்பிட, சாதி சான்றுகளை, பல்வேறு இணைய வழி சேவைகள் அனைத்தும் நமது கிராமத்தில் வழங்க கிராம சேவை மையங்கள் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
இதன் மூலம் நாம் இணையம் மூலம் செய்ய வேண்டிய அனைத்து வசதிகளையும் நமது கிராமத்தில் லஞ்சமில்லாமல் பெற முடியும்.
ஒரு கிராமத்திற்கு ஐந்து ஆண்டுக்கு 4 1/2 கோடி ருபாய் வழங்கப்படுகிறது.
உங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாக பயண்படுத்த படுகிறதா ?
என்னென்ன பணிகள் நடைபெற்றது ?
தரமான பொருட்கள் உபயோகப்படுத்த பட்டுள்ளதா ?
என்ற கேள்விகளை எழுப்புங்கள் !
கிராம சபையில் அதிகாரம் மக்களுக்கே !
உள்ளாட்சி அதிகாரங்களில், கிராம சபைகள் என்பது ஒரு சட்ட பிரிவு மட்டும்தான். அது வலிமையானது.
Saturday, 21 April 2018
பூஞ்சோலை--- நிறைவு விழா
நிறைவு விழா
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து கிராமம் ... பூஞ்சோலையில் தோட்டனூத்து மற்றும் புளியம்பட்டி கிராம மக்கள் தங்கள் அம்மனை கரகம் ஜோடித்து வழிபட்டு சீரும் சிறப்புமாக திருவிழா கொண்டாடினர்
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து கிராமம் ... பூஞ்சோலையில் தோட்டனூத்து மற்றும் புளியம்பட்டி கிராம மக்கள் தங்கள் அம்மனை கரகம் ஜோடித்து வழிபட்டு சீரும் சிறப்புமாக திருவிழா கொண்டாடினர்
வள்ளி திருமணம் என்னும் புராண நாடகம் நடைபெற்றது ..இதில் நாடக கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
![]() |
நாடக கலைஞர்களுடன் நண்பர்கள் |
உற்சவ திருவிழா நிறைவு பெற்றது
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து கிராமம் -நமது ஊர் நல்லமநாயக்கன்பட்டியில் எழுந்தருளி நமக்கு நன்மைகள் பல வழங்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ,அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் உற்சவ திருவிழா சிறப்பாக நிறைவு பெற்றது
அம்மன் கங்கை செல்லும் பொது வேண்டிய வரங்களை அள்ளிக் கொடுத்துச் சென்றாள்
![]() |
பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அருளி கங்கை செல்ல கோவிலில் இருந்து கிளம்பினாள் எங்கள் மாரி |
![]() |
ஊர் மக்கள் ஆடிப் பாடி அம்மனை கங்கைக்கு வழி அனுப்பி வைத்தனர் |
![]() |
முளைப்பாரியுடன் பெண்கள் அம்மனை பின்தொடர்ந்து கங்கைக்கு பயணித்தனர |
அம்மன் கங்கை அடைதல் |
![]() |
அம்மன் ஆவேசமாக கங்கைக்கு விரைந்து சென்றாள |
அதிசயங்கள்....
பூரி ஜெகன்னாதர் திருக்கோவிலின் அதிசயங்கள்.....
1.♥♥கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.
2.♥♥கோவில் இருக்கும் பூரி என்ற ஊரில் எந்த இடத்தில் , எந்த பக்கத் தில் இருந்து பார்த்தாலும் , கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.
3.♥♥.பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் , காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் , மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.
4.♥♥இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத் திலும் கண்களுக்கு தெரிவதில்லை.
5.♥♥இந்த கோவிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.
6.♥♥இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி , இருபது லட்சமானாலும் சரி , சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதுமில்லை. மீந்து போய் வீணானதுமில்லை.
7.♥♥இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு , விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள். அப்படி சமைக்கும் போது , அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.
8.♥♥சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உற்புறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது , கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது. ஆனால் , அதே சிங்கத் துவாராவி ன் முதல் படியில் கோவிலின் வெளிபுறமாக நுழையும் போது , கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.
சிரஞ்சீவிகள்
சிரஞ்சீவிகள் ஏழு பேர் !
அஸ்வத்தாமன்,
பரசுராமன்,
மார்க்கண்டேயன்,
ஹனுமான்,
விபீஷணன்,
மாபலி சக்ரவர்த்தி,
வியாசர் --
இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள்.
இவர்கள் எழுவரும் ஆலயம், பாதுகாப்பவர்கள்.
நாம் ஆலய தரிசனம் முடித்ததும்,
ஐந்து நிமிடமாவது கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம்.
அப்போது
அந்த எழுவரும் நம்முடன் பாதுகாப்பாக வீடுவரை வருவார்களாம்.
அதனால்,
கோவிலுக்குச் சென்று விட்டு
நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.!
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
அஸ்வத்தாமன்,
பரசுராமன்,
மார்க்கண்டேயன்,
ஹனுமான்,
விபீஷணன்,
மாபலி சக்ரவர்த்தி,
வியாசர் --
இந்த ஏழு பேரும் சிரஞ்சீவிகள்.
இவர்கள் எழுவரும் ஆலயம், பாதுகாப்பவர்கள்.
நாம் ஆலய தரிசனம் முடித்ததும்,
ஐந்து நிமிடமாவது கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம்.
அப்போது
அந்த எழுவரும் நம்முடன் பாதுகாப்பாக வீடுவரை வருவார்களாம்.
அதனால்,
கோவிலுக்குச் சென்று விட்டு
நேரே வீட்டிற்கு வந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்க வேண்டும் என்பது ஐதீகம்.!
தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
Tuesday, 10 April 2018
தெரியாத உண்மைகள்.
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
சித்திரை (equinox) - புத்தாண்டு.
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (equinox)- தீபாவளி.
தை (winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
நமது முன்னோர்கள் "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்.
தெரியாத உண்மைகள்.
சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1
இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.
நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா...?
"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு"என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.
என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்..!!
பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...
அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...
இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!
சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?
சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் "சித்திரை 1". தமிழ் புத்தாண்டு. (In science it is called Equinox)
அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் "ஆடி 1".ஆடி பிறப்பு.(solstice)
மறுபடியும் கிழக்குக்கு வரும்போது "ஐப்பசி 1". தீபாவளி.(equinox)
மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது "தை1". பொங்கள். (solistice)
இந்த வானியல் மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் தான் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
சித்திரை (equinox) - புத்தாண்டு.
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு.
ஐப்பசி (equinox)- தீபாவளி.
தை (winter solstice) - பொங்கல்.
இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
நமது முன்னோர்கள் "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் . மிகவும் மகத்தானவர்கள்.
நம்ம ஊரு திருவிழா
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து கிராமம் நல்லமநாயக்கன் பட்டியில்
எழுந்தருளி அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ,அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் பங்குனி மாத உற்சவ திருவிழா....
10-04-2018----வான வேடிக்கையுடன் கரகம் ஜோடித்தல்
11-04-2018----மாவிளக்கு ,பால்குடம் ,அக்னிச்சட்டி எடுத்தல்
12-04-2018----அம்மன் கங்கை சேர்த்தல்
அனைவரும் வருக அம்மன் அருள் பெருக ...
ஊர் பொதுமக்கள்
![]() |
மின்னொளியில் கோவிலின் முன்புற தோற்றம் |
![]() |
அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் |
![]() |
மிரட்டலான வானவேடிக்கைகளுடன் ஒளிரும் கோவில் காட்சி |
![]() |
வான வேடிக்கைகளுடன் அம்மன் கரகமாக பவனி வந்து கோவிலுக்கு செல்லும் காட்சி |
Subscribe to:
Posts (Atom)