Monday, 30 April 2018

சித்தர்கள் மனிதர்களுக்கு அருள எளிதில் ஏன் வருவதில்லை?

சித்தர்கள் மனிதர்களுக்கு அருள எளிதில் ஏன் வருவதில்லை?


தென்னாடுடய சிவனே போற்றி!!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!











சித்தர்கள் ஏன் மனிதர்கள் முன்னால் வருவதில்லை??? வந்து மனிதனின் நன்மைக்காக தங்கள் அட்டமாசித்திகளை பயன்படுத்தலாமே!!!  வந்தால் என்ன ஆகும்???


இந்த கேள்விக்கான பதில்...


பலகாயக்கலை என்று சொல்லப்பட்ற கூடு விட்டு கூடு பாய்கின்ற கலை சித்தர்களுக்கே உரியது. 18 சித்தர்களும் இதில் கைதேர்ந்தவர்கள். அவர்களுள் ஒருவர் திருமூலர் (எல்லோரும் நன்கு அறிந்த திருமந்திரத்தை இயற்றியவர் தான்). அவர் மக்கள் நன்மைக்காக களமிறங்கியதில் என்ன ஆயிற்று தெரியுமா??




திருமூலர் ஒருமுறை ஆகாய மார்க்கமாக சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிக்க சென்றுகொண்டிருந்தார். அப்போது ஆகாய மார்க்கமாக வந்த ஒரு அரைசித்தர் (சித்திகளில் முழுமை அடையாதவர், உப சித்தர் என்றும் கூறலாம்) திருமூலரை வணங்கி நின்றார். அவர் முகம் வாடியிருந்தது. அதை கண்ட திருமூலர், காரணத்தை வினவினார். உபசித்தர் திருமூலரிடம், சித்தராய் இருப்பது ஆனந்தம் அளித்தாலும் நம்மால் மக்களுக்கு எந்த பயனும் இல்லையே, சித்தர்கள் ஏன் மக்களின் துயரம் போக்க முன்வருவதில்லை??
‘மக்களின் சேவயே மகேசன் சேவை’யல்லவா!!! என்றெல்லாம் புலம்பினார்.


உபசித்தர் குழப்பத்தில் உள்ளார். முழு சித்தர் அகாததே இதற்கு காரணம் என்பதை தன் ஞானத்தால் கண்டார் திருமூலர்.  ஏனெனில்  முழுமையடந்த சித்தன் கவலை,துக்கம்,மகிழ்ச்சி முதலானவற்றை கடந்தவன். உபசித்தருக்கு இந்த எண்ணம் தோன்ற காரணம் யாதோ என கேட்டார் திருமூலர்.


 அதற்கு அவர் இந்த நாட்டின் மன்னன் தன் இளவயதிலே அற்ப ஆயுளால் வேட்டைக்கு சென்று அரவு (பாம்பு) தீண்டி இறந்து கிடப்பதை பாருங்கள் என்று காட்டினார். இவனுக்கு வாரிசு இல்லை. சில தினங்களில் எதிர் நாட்டு அரசன் போர்தொடுத்து வரவுள்ளான். இந்நாட்டை யார் காப்பது. சித்தர்கள் நாம் ஏன் இதை நம் கடமயாக கொள்ள கூடாது  என்றவாறு கேட்டார்

திரிகால ஞானியான திருமூலர் நடக்கவிருப்பதை அறிந்தும் எதுவும் அறியாதவர் போல உதவலாமே என ஒப்புகொண்டு, விஷமேறிய அந்த அரசன் உடலை மூலிகயால் சுத்தப்படுத்தி தனது பலகாய சித்தியினால் அரசன் உடல் புகுந்தார். தனது பிறப்பு உடலை சதுரகிரியின் மலையில் ஒரு குகையினுல்
மறைத்து வைத்தார். அரசனாகி மாளிகைக்கு சென்றார். மக்களுக்கான நற்பனிகளை செய்தார்.

அரசனுக்கோ புதிதாக திருமணம் முடிந்திருந்தது. அரசன் மனைவி தன்னிடம் நெருங்கும்பொதெல்லம் விலகிச்சென்றார் திருமூலர். அரசரின் நடவடிக்கயில் மாற்றம் தெரிவது கண்டு அவரிடம் அவள் கேட்டதில் திருமூலர் நடந்ததை கூறினார். மக்களின் நன்மைக்காகவே நான் உன் கனவன் உடல் ஏந்தியிருக்கிறேன் என்றும், போர் முடிந்ததும் நல்லதகுதியனவனை அரசனாக்கிவிட்டு இவ்வுடலை விட்டு பிரிந்து விடுவதகவும் கூறினார். இதை கேட்ட அரசனின் மனைவி அதிர்ச்சியுற்றாள். அழுது புலம்பினாள்.

ஊர் அரிய தான் விதவை கோலமுறுவதை என்னி அச்சமடைந்தாள். அது நடவாமலிருக்கவும் அரசு அழியாமல் இருக்கவும் ஒரு உபாயம் தேடினாள். திருமூலரின் உன்மயான உடலை அழித்துவிட்டால் அவர் இங்கேயே தங்கி விடுவார் என எண்ணி ஆட்களை அனுப்பி அவரின் உடலை கண்டுபிடித்து தீயில் சுட்டு எரித்தாள்.

தன் உடல் அழிந்ததை அறிந்த திருமூலர் அவ்வரசை விட்டு வெளியெறி உபசித்தரை அடைந்து, கண்டீர்களா உபசித்தரே இந்த மனிதர்களின் எண்ணத்தயும் செயலையும், இவர்களுக்கா நல்லது நினைத்தீர்கள்!! உங்களுக்கு வந்த இந்த கவலை வேறு சித்தர் எவருக்கும் வரமலிருக்கவே
நடக்கவிருப்பதை அறிந்தும் நான் அனைத்தயும் நடத்தினேன் என்று கூறினார். உபசித்தர் தன் செயலுக்காக வருந்தினார்.


சொந்த உடல் கிடைக்கப்பெறாத திருமூலர், அரசனின் உடலை தூய்மைபடுத்தி அதன் மூலமே சஞ்சரித்தார். விதியின் காரனத்தால் திருமூலரின் ஆயுள் முடிவடய அவர் உடல் அழிந்தது. அதனால்
இறைவனோடு கலந்து இறவா நிலை பெற்ற அவர் ஆன்மா வேறு உடலை தனதாக்கி கொண்டது.

மனிதரின் நன்மை கருதிய சித்தரின் நிலை பார்த்தீர்களா...?!! இதனால்தான் சித்தர்கள் அவ்வளவு எளிதில் காட்சி தருவதில்லை. சிவனே கதி என்று தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வாழ்கின்றனர்.

ஓம் நம சிவாய!!!

No comments:

Post a Comment